சென்னை:தமிழக கல்வி அமைச்சரே தாங்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் போது மறந்து விடுவதும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் போது கோரிக்கை வைப்பதும் திருந்தாத திராவிட மாடல் என டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக சாடியுள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஒப்புக்கொண்டதால் தான் நிதியை விடுவிப்போம் என மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பொதுசெயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு கூறியதாவது , தமிழக மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் திமுக தான் தமிழக மக்களை வஞ்சிக்கிறது... ஒரே ஒரு கேள்வியைத்தான் நாம் கேட்கிறோம் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும் மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.. புதிய கல்விக் கொள்கை கூட ஏதாவது ஒரு மொழி என்று தான் சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூன்றாவது மொழியாக ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா.?. எங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்கள்.. தமிழகப் பிள்ளைகளின் தனியார் பள்ளிகளில் மும் மொழிக் கொள்கை அரசு பள்ளி பிள்ளைகளுக்கு இருமொழிக் கொள்கை என்ற பாகுபாடு சரியா? ஏழைக் குழந்தைகளை இப்படி வஞ்சிக்கலாமா?
மும்மொழிக் கல்வியை ஒப்புக்கொண்டால் என்ன? தெலுங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் இந்தி படிக்கிறார்கள். மூன்றாவது மொழியை கற்றுத்தராமல் தமிழ்நாடு அரசுதான் மாணவர்களை வஞ்சிக்கிறது. தமிழக அரசின் கல்வி அமைச்சர் அவர்களே...மத்திய ஆட்சியில் நீங்கள் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது இதை ஏன் செய்யவில்லை... வளமாக ஆறு மத்திய அமைச்சர்கள் திமுகவில் வலம் வரும்போது கல்வி துறையைப் பெற்று இந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாமே... தாங்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் போது மறந்து விடுவதும், எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் போது கோரிக்கை வைப்பதும் திருந்தாத திராவிட மாடல்.. என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கட்சி நிர்வாகிகள் மாற்றம்.. இது களையெடுப்பல்ல.. கட்டுமானச் சீரமைப்பு.. முதல்வர் மு.க. ஸ்டாலின்
சட்டவிரோதமாக அமெரிக்காவில்.. குடியேறியுள்ள இந்தியர்களை.. திரும்பப் பெற தயார்.. பிரதமர் மோடி உறுதி
தவெக தலைவர் விஜய்க்கு.. ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!
ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி.. பிப்ரவரி 20ல் முழக்கப் போராட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
சென்னையில்.. நாளையும் பனிமூட்டம் இருக்கும்.. மற்ற பகுதிகளில் ஒரு வாரத்திற்கு.. வறண்ட வானிலை!
சரயு நதிக்கரையில்.. ஜல சமாதி செய்யப்பட்ட.. ராமர் கோவில்.. தலைமை அர்ச்சகர் ஆச்சார்யாவின் உடல்
மார்ச் 22ஆ இல்லாட்டி 23ஆம் தேதியா.. ஐபிஎல் தொடங்குவது எப்போ?.. தொடக்க விழாவுடன் முதல் போட்டி!
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், 11,344 பட்டுச் சேலைகள்.. இன்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு
இன்னும் எத்தனை உயிர்களை பறிகொடுக்க வேண்டும்?.. பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!
{{comments.comment}}