உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரான பின்னர்.. முதல் அமைச்சரவைக் கூட்டம்.. அக். 8ம் தேதி!

Oct 02, 2024,03:59 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி  தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 28ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.அமைச்சரவையில் இருந்து கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டு, புதிதாக 4 அமைச்சர்கள் பதிவியேற்றுள்ளனர்.புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் கடந்த 29ம் தேதி பதவியேற்றனர். புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் ஆளுநர் ஆர். என். ரவி. பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். சேலம் இரா. ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன் மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். 




விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகியுள்ளார்.  இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியேற்ற கோவி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 2 அமைச்சர்களும் முதல் முறையாக அமைச்சர்களாகியுள்ளனர். இதுதவிர, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 பேரின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக, வருகிற 8ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நவம்பர் மாதத்தில் தமிழக சட்டபேரவை கூட்டமும் நடைபெறும் என்பதால் அதுகுறித்தும் விவதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் முதன் முதலில் நடக்கும் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குடையை ரெடியா எடுத்து வச்சுக்கோங்க...தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் கனமழைக்கு வெளுக்குமாம்!

news

சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி மனு... என்ன கிழமை தெரியுமா?

news

மசோதாவை கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

news

20 வது ஆண்டாக நிதிஷ் ஆட்சி.. பத்தாவது முறையாக பதவியேற்பு.. சாதித்தார் நிதீஷ் குமார்

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.. மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்

news

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகளுக்கான ₹309 கோடி எங்கே... வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? : அண்ணாமலை கேள்வி!

news

கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்

news

துரைசிங்கம் Coming back?.. மீண்டும் போலீஸ் அவதாரம் எடுக்கிறார் சூர்யா.. ஆவேஷம் இயக்குநருக்காக!

அதிகம் பார்க்கும் செய்திகள்