சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 8ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 28ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.அமைச்சரவையில் இருந்து கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டு, புதிதாக 4 அமைச்சர்கள் பதிவியேற்றுள்ளனர்.புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் கடந்த 29ம் தேதி பதவியேற்றனர். புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் ஆளுநர் ஆர். என். ரவி. பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். சேலம் இரா. ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி.செழியன் மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகியுள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியேற்ற கோவி.செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய 2 அமைச்சர்களும் முதல் முறையாக அமைச்சர்களாகியுள்ளனர். இதுதவிர, அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 பேரின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக, வருகிற 8ம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நவம்பர் மாதத்தில் தமிழக சட்டபேரவை கூட்டமும் நடைபெறும் என்பதால் அதுகுறித்தும் விவதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் முதன் முதலில் நடக்கும் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆறுதல் வெற்றியில் தோனி செய்த புதிய சம்பவம்.. பல காலத்திற்கு நின்று பேசப் போகும் சாதனை!
அமிர்தசர் கிராமங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கெட்டுகள்.. பாகிஸ்தான் ராணுவம் வீசியதா?
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்.. டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?
என்னாது.. இன்னும் புழக்கத்தில் இருக்கிறதா 2000 ரூபாய் நோட்டுக்கள்.. திடுக்கிட வைக்கும் ரிப்போர்ட்!
சாலை விபத்தில் சிக்கினால்.. இனி இலவச மருத்துவம்.. மத்திய அரசே சிகிச்சைக்கு பணம் தரும்
Operation Sindoor effect.. இந்திய பங்குச்சந்தைக்கு ஏற்றம்.. சென்செக்ஸ் 165 புள்ளிகள் உயர்வு
இந்தியாவின் அதிரடித் தாக்குதல்: 48 மணி நேரம் வான்வெளியை மூடியது பாகிஸ்தான்!
பழனியை சேர்ந்த மாணவி முதல் மதிப்பெண் பெற்று சாதனை.. வாழ்த்து மழையில் நனையும் ஓவியாஞ்சலி..!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.440 உயர்வு..!