சென்னை: 2024- 25-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும், பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் எட்டு லட்சத்து 25 ஆயிரத்து 57 மாணவ மாணவிகள் இந்த தேர்வு எழுதினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 0.43 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பான பதிவிட்டு பட்டியல் பணிகள் முடிவடைந்து மே ஒன்பதாம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளி கல்வித்துறை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பொது தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகள் விரைவாக முடிவடைந்ததால் ஒரு நாள் முன்கூட்டியே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. காலை 9:00 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மொத்தம் 95.03% ஆகும். அதாவது 7.92 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 93.16 சதவிகிதம் மாணவர்களும், 96.7 சதவிகிதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் 135 பேரும், கணினி அறிவியலில் 9536 பேரும், கணினி பயன்பாடுகள் 4208 பேரும், கணிதத்தில் 3022 பேரும், வேதியியலில் 3181 பேரும், வணிகவியலில் 1624 பேரும் 100 க்கும் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் 95.71 சதவீதமும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 98.88 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 95.30 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 96.50 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 90.14 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக சதவீதம் தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்களில் அரியலூர் முதல் இடமும்(98.82%), ஈரோடு 2வது இடமும் (97.98%), திருப்பூர் 3வத இடமும் (97.53%), கோவை 4வது இடமும் (97.48%), கன்னியாகுமரி 5வது(97.01%) பிடித்துள்ளன.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}