ஐந்து மாவட்டங்களில் இன்று கன மழை.. நாளை 8 மாவட்டங்களில் அதி கன மழை.. வானிலை மையம் தகவல்

Nov 25, 2024,02:45 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஐந்து மாவட்டங்களில் கன மழைக்கும், நாளை 8 மாவட்டங்களில் அதிக கன மழைக்கும், நாளை மறுநாள் இரண்டு மாவட்டங்களில் அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களுக்கு அதே பகுதிகளில் நிலை கொண்டு இருப்பதால் தமிழ்நாட்டில்  நாளை, நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால், ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 




இந்த நிலையில் தமிழ்நாட்டில் எந்த பகுதிகளில் கன முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,


இன்று கன மழை: 


மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை அதி கனமழை: 


நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மூன்று மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாளை மிக கனமழை: 


விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கன மழை:


செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளை மறுநாள் அதிக கன மழை: 


நாளை மறுநாள் மயிலாடுதுறை, கடலூர், ஆகிய இரண்டு மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


நாளை மறுநாள் மிக கனமழை: 


விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஆகிய ஆறு மாவட்டங்களில் நவம்பர் 27ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மக்களே நாளை மறுநாள் உஷார்!


சென்னை, செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய 8 மாவட்டங்களில் 27ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்