சென்னை: வட தமிழ்நாட்டை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதால், தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மயிலாடுதுறை, கடலூர், காரைக்கால், புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. அதேபோல் புதுச்சேரியிலும் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 12 சென்டிமீட்டர் மழை வெளுத்து வாங்கியது.
இந்த தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடல் பகுதிகளில் நீடிக்கிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருப்பதால் வடகடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 16 வரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும். இப் பகுதிகளில் நான்கு நாட்கள் மழை பெய்யக்கூடும் என்பதால், கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
1 மணிக்குள் இங்கெல்லாம் மழை பெய்யும்
இதற்கிடையே, இன்று பிற்பகல் 1 மணிக்குள் எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், ஆகிய 11 மாவட்டங்களில் பகல் ஒரு மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ரசிகர்களே.. உங்களது அன்புக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.. அஜீத் குமார்நெகிழ்ச்சி!
ஈரோடு கிழக்கில் களம் காணும் ஆசிரியை சீதாலட்சுமி.. வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. 2வது முறையாக போட்டி
இயற்பெயர்களுக்கு திரும்பும் முன்னணி நடிகர்கள்... தமிழ் சினிமாவின் புதிய டிரெண்ட்.. அப்போ ரஜினி?
தமிழ்நாடு முழுவதும் களை கட்டிய பொங்கல் திருநாள்.. வீடுகள் தோறும் Happy Pongalo Pongal!
சீறிப் பாயும் காளைகள்.. விறுவிறு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. பொங்கல் நாளில் கோலாகலம்!
பொங்கல் பண்டிகை 2025 : தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்.. நோட் பண்ணிக்குங்க!
மகிழ்ச்சி பொங்கட்டும்.. நல்லிணக்கம் வளரட்டும்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பொங்கல் வைக்கும் நேரத்தில் நாளை மழை பெய்யுமா.. என்ன சொல்கிறது வானிலை மையம்?
மாடு பிடிமாடு.. அதிகமாக பிடிச்சது யாரு.. இந்தா பிடி காரு.. களைகட்டப் போகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
{{comments.comment}}