வங்கக் கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

Oct 15, 2024,10:27 AM IST

சென்னை:   வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்குமா? அல்லது புயலாக வலுப்பெறுமா என இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு வரை நகராமல் அதே  இடத்தில் நிலை கொண்டிருந்தது. இதன் பிறகு இன்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வருகிறது. இதன் அடுத்த நர்வாக, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி, குறிப்பாக சென்னை கடற்கரைக்கு அருகே வர இருப்பதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதனைத் தொடர்ந்து வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இரண்டு நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகர உள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா அல்லது தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு அடுத்தடுத்த செய்தி குறிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வட தமிழ்நாட்டின் நோக்கி நகர்ந்து வர உள்ள நிலையில், இன்றும் நாளையும் வடக்கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தென் கடலோர மாவட்டங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீச கூடும் என்பதால் அடுத்த மூன்று தினங்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!

news

வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

news

முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்

news

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி

news

2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

news

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

news

டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி

news

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

அதிகம் பார்க்கும் செய்திகள்