வங்கக் கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

Oct 15, 2024,10:27 AM IST

சென்னை:   வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்குமா? அல்லது புயலாக வலுப்பெறுமா என இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு வரை நகராமல் அதே  இடத்தில் நிலை கொண்டிருந்தது. இதன் பிறகு இன்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வருகிறது. இதன் அடுத்த நர்வாக, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி, குறிப்பாக சென்னை கடற்கரைக்கு அருகே வர இருப்பதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதனைத் தொடர்ந்து வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இரண்டு நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகர உள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா அல்லது தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு அடுத்தடுத்த செய்தி குறிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வட தமிழ்நாட்டின் நோக்கி நகர்ந்து வர உள்ள நிலையில், இன்றும் நாளையும் வடக்கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தென் கடலோர மாவட்டங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீச கூடும் என்பதால் அடுத்த மூன்று தினங்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்