சென்னை: வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்குமா? அல்லது புயலாக வலுப்பெறுமா என இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு வரை நகராமல் அதே இடத்தில் நிலை கொண்டிருந்தது. இதன் பிறகு இன்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வருகிறது. இதன் அடுத்த நர்வாக, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி, குறிப்பாக சென்னை கடற்கரைக்கு அருகே வர இருப்பதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இரண்டு நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகர உள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா அல்லது தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு அடுத்தடுத்த செய்தி குறிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வட தமிழ்நாட்டின் நோக்கி நகர்ந்து வர உள்ள நிலையில், இன்றும் நாளையும் வடக்கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தென் கடலோர மாவட்டங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீச கூடும் என்பதால் அடுத்த மூன்று தினங்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}