வங்கக் கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

Oct 15, 2024,10:27 AM IST

சென்னை:   வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்குமா? அல்லது புயலாக வலுப்பெறுமா என இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு வரை நகராமல் அதே  இடத்தில் நிலை கொண்டிருந்தது. இதன் பிறகு இன்று அதிகாலை 5.30 மணியளவில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது தற்போது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வருகிறது. இதன் அடுத்த நர்வாக, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி, குறிப்பாக சென்னை கடற்கரைக்கு அருகே வர இருப்பதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதனைத் தொடர்ந்து வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இரண்டு நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகர உள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா அல்லது தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்குமா என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து அறிவிப்பு அடுத்தடுத்த செய்தி குறிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வட தமிழ்நாட்டின் நோக்கி நகர்ந்து வர உள்ள நிலையில், இன்றும் நாளையும் வடக்கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தென் கடலோர மாவட்டங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


வங்கக்கடல், தென்கிழக்கு வங்க கடல் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றும் வீச கூடும் என்பதால் அடுத்த மூன்று தினங்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ் கடலில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்