மக்களே.. நேற்று ராத்திரி மழை நல்லாருந்துச்சா?.. 5 நாட்களுக்கு லேசா பெய்யுமாம்.. ஹேப்பி நியூஸ்!

Sep 24, 2024,06:02 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் கோடை காலத்தை போலவே தற்போது  பரவலாக வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.அதே நேரத்தில் சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 


அதன்படி தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெக்கை சற்று தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சென்னை மணலியில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 




ஆவடியில் 11 சென்டிமீட்டர் மழையும், திருநின்றவூர், மதுரவாயல், அம்பத்தூரில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், வளசரவாக்கத்தில் 6.5 சென்டிமீட்டர் மழையும் திருவேற்காட்டில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் தென் தமிழகத்தை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.


இதற்கிடையே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. 


இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது .



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

news

கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!

news

கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்