சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலத்தை போலவே தற்போது பரவலாக வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.அதே நேரத்தில் சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெக்கை சற்று தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சென்னை மணலியில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
ஆவடியில் 11 சென்டிமீட்டர் மழையும், திருநின்றவூர், மதுரவாயல், அம்பத்தூரில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், வளசரவாக்கத்தில் 6.5 சென்டிமீட்டர் மழையும் திருவேற்காட்டில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் தென் தமிழகத்தை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}