சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலத்தை போலவே தற்போது பரவலாக வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது.அதே நேரத்தில் சென்னையிலும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெக்கை சற்று தணிந்து இதமான சூழல் நிலவுகிறது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சென்னை மணலியில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
ஆவடியில் 11 சென்டிமீட்டர் மழையும், திருநின்றவூர், மதுரவாயல், அம்பத்தூரில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், வளசரவாக்கத்தில் 6.5 சென்டிமீட்டர் மழையும் திருவேற்காட்டில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் தென் தமிழகத்தை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.
இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது .
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}