சென்னை: வட தமிழக பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு கேரள மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் நேற்று பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் அநேக இடங்களில் நேற்று இரவு விடிய விடிய கன மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக கோயம்பேடு மெட்ரோ சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்க மாநகராட்சி தற்போது மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் திண்டுக்கல், தேனி,கோயம்புத்தூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இது தவிர தூத்துக்குடியில் பெய்த கனமழையால் கொம்புகாரநத்தம் தரைபாலத்தையும் மழை வெள்ளம் மூழ்கடித்தது.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று தினங்களில் வடக்கு மேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட தமிழகம் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:
சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், அரியலூர்,பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
{{comments.comment}}