சென்னை: வட தமிழக பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு கேரள மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் நேற்று பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் அநேக இடங்களில் நேற்று இரவு விடிய விடிய கன மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக கோயம்பேடு மெட்ரோ சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்க மாநகராட்சி தற்போது மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் திண்டுக்கல், தேனி,கோயம்புத்தூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இது தவிர தூத்துக்குடியில் பெய்த கனமழையால் கொம்புகாரநத்தம் தரைபாலத்தையும் மழை வெள்ளம் மூழ்கடித்தது.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று தினங்களில் வடக்கு மேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட தமிழகம் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:
சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், அரியலூர்,பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
Dr Latha Poems: நம்பிக்கை என்னும் சிறகு முளைத்தால்.. நலிவு எல்லாம் நொடியில் மறையும்!
நெருங்கி வரும் பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க இன்னும் சிக்கல் தீரல.. என்ன செய்வார் ஆளுநர்?
என் தேவியின் கை.. என் நெற்றியில் பட்டால் .. அவளின் (ல்) அவன்! (13)
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!
{{comments.comment}}