சென்னை: வட தமிழக பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லட்சத்தீவு கேரள மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் நேற்று பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் அநேக இடங்களில் நேற்று இரவு விடிய விடிய கன மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை காரணமாக கோயம்பேடு மெட்ரோ சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தடுக்க மாநகராட்சி தற்போது மழை நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் திண்டுக்கல், தேனி,கோயம்புத்தூர், புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இது தவிர தூத்துக்குடியில் பெய்த கனமழையால் கொம்புகாரநத்தம் தரைபாலத்தையும் மழை வெள்ளம் மூழ்கடித்தது.
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று தினங்களில் வடக்கு மேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வட தமிழகம் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:
சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நாமக்கல், அரியலூர்,பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?
தாய்வீடு அனிதா ராஜை ஞாபகம் இருக்கா.. 62 வயதிலும் எப்படி.. ஃபிட்டா இருக்காங்க பாருங்க!
தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}