சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இப்பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அடை மழை வெளுத்து வாங்கியது.சென்னை, மதுரை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென கரு மேகங்கள் ஒன்று திரண்டு,இருள் சூழ்ந்து காற்றுடன்,இடி மின்னலுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலிலேயே இருள் சூழ்ந்ததால் வாகனங்கள் ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். திடீரென பெய்த இந்த கோடையின் மழையால் தமிழ்நாட்டில் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாம். குறிப்பாக கர்நாடகாவில் ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}