தெற்கு கேரள கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி.. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

Nov 04, 2024,10:06 AM IST

சென்னை:   தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வடகிழக்கு  பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று தேனி,மதுரை அந்தியூர், திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. அதேபோல் நீலகிரி, வால்பாறை, குன்னூர், ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அப்பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இதனால் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.




நீலகிரியில் தொடரும் கன மழை 


நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த கனமழை காரணமாக மலைப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. குன்னூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குன்னூர் தாலுகாவிற்கு மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை எதிரொலியால் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ஊட்டி மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னைக்கும் மழை வாய்ப்பு


இந்த நிலையில் தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்