சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தாலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தேனி, திண்டுக்கல், தஞ்சை, விருதுநகர், நாகை,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரமாக கன மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19 சென்டிமீட்டர் மிக கனமழை வெளுத்து வாங்கியது.

இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடுகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோல் அரியலூர் பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள பெரிய வெட்டி ஏரி நிரம்பியுள்ளது. அதிலிருந்து வரும் நீர் கலுங்கு ஓடைக்கு வந்து அருகில் உள்ள வயல்களில் நீர் சூழ்ந்து நெற்கதிர்கள் அனைத்தும் வீணாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஓடை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கும்படி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தவிர நத்தம், விருதுநகர் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுமார் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதிலும் தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}