சென்னை: வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களிலும், நாளை 5 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து பனிக்காலம் துவங்குவது வழக்கம். அதன்படியே பனிக்காலம் தொடங்கி ஜனவரி முதல் பனி பொழிவு அதிகமாக இருந்து வந்தது.இந்த பருவத்தில் பனிப்பொழிவு மட்டும் இருக்குமே தவிர மழைக்கு வாய்ப்பு இருக்காது. அதே சமயத்தில் எந்த அளவு பனிப்பொழிவு அதிகரிக்கிறதோ, அடுத்து வரும் வெயில் காலங்களில் வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும் என கூறுவது உண்டு. ஆனால் தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் காலையில் அதிகபடியான பனியுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளுமையான காற்றும் வீசி வருகிறது.
இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 12ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகப் கடலோரப் பகுதிகளின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை:
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
கன்னியாகுமரி, ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!
கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக
{{comments.comment}}