Weather Forecast: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 3 மாவட்டங்கள்!

Nov 16, 2024,08:57 PM IST

சென்னை: காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தீவிரமடைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் டெல்டா விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் அதிகம் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நவம்பர் 18, 19, 22 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை:


விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை: 


நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

மழலைக் குழந்தை!

news

நெருங்கும் தீபாவளி...தங்கம் வெள்ளி விலை எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

விண்வெளி நாயகா.. மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று!

news

மும்பை பங்குச் சந்தை.. உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்.. அமெரிக்க பேச்சுவார்த்தை எதிரொலி

அதிகம் பார்க்கும் செய்திகள்