Weather Forecast: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 3 மாவட்டங்கள்!

Nov 16, 2024,08:57 PM IST

சென்னை: காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தீவிரமடைந்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், தென்காசி, உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் டெல்டா விவசாயிகள் பாசனத்திற்காக தண்ணீர் அதிகம் வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




இந்த நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நவம்பர் 18, 19, 22 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று கனமழை:


விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கனமழை: 


நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், ஆகிய மூன்று மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்