சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு இன்று பிற்பகலில் இருந்து மழை தொடங்கும். பின்னர் மாலை இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்த நிலையில் காலையிலேய நகர் முழுவதும் பலத்த மழையைச் சந்தித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் சென்னையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் கடல் அலைகள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மழை குறைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வெயில் அடித்து வந்தது. ஆனால் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மீண்டும் மழை பெய்யும் அறிகுறி தென்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்கள் பரவலாக மழை பெய்யும். நன்கு அமைந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்,திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகலில் இருந்து மழை தொடங்கும். தொடர்ந்து மாலை அல்லது இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த பகுதி சென்னைக்கு தொலைவில் இருந்தாலும் வடக்கு திசையில் நகர்ந்து வருவதால் சென்னைக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். குன்னூர் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் மூன்று நாட்கள் அதனை ஒத்தி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையி் காலையிலேயே சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்கள் பலவற்றிலும் கூட பலத்த மழை கொட்டித் தீர்த்தது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜில் ஜில் சென்னையாக மாறியிருக்கிறது தலைநகர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}