Chennai Rains: காலையிலேயே செம மழையில் நனைந்த சென்னைவாசிகள்.. இன்று முழுக்க தொடருமாம்!

Dec 11, 2024,10:20 AM IST

சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னைக்கு இன்று  பிற்பகலில் இருந்து மழை தொடங்கும். பின்னர் மாலை இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்த நிலையில் காலையிலேய நகர் முழுவதும் பலத்த மழையைச் சந்தித்துள்ளது.


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதேபோல் சென்னையை ஒட்டிய கடற்கரை பகுதிகளிலும் கடல் அலைகள் பெரும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 




தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக மழை குறைந்து மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வெயில் அடித்து வந்தது. ஆனால்  வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மீண்டும் மழை பெய்யும் அறிகுறி தென்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,  வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்கள் பரவலாக மழை பெய்யும். நன்கு அமைந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர்,திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும்.


குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகலில் இருந்து மழை தொடங்கும். தொடர்ந்து மாலை  அல்லது இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க கூடும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த பகுதி சென்னைக்கு தொலைவில் இருந்தாலும் வடக்கு திசையில் நகர்ந்து வருவதால் சென்னைக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.


அதேபோல் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். குன்னூர் கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால் மூன்று நாட்கள் அதனை ஒத்தி வைக்குமாறு  அறிவுறுத்தியுள்ளார்.


இந்த நிலையி் காலையிலேயே சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்கள் பலவற்றிலும் கூட பலத்த மழை கொட்டித் தீர்த்தது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜில் ஜில் சென்னையாக மாறியிருக்கிறது தலைநகர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்