சென்னை: தமிழ்நாட்டில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது. மழைக்கு பிரேக் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதற்கிடையே தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
அதேபோல் தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இது தவிர டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது. மழைக்கு விடுமுறை நாளாக இருக்கும். இருந்தாலும் டெல்டா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் இன்று வெயில் அடிக்கும். மழைக்கு வாய்ப்பு இருக்காது என்ன தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடையாமலை மற்றும் தக்கலையில் தலா 88.8 மில்லி மீட்டர் மழையும், கோலிப்போர்விளையில் 88.2 மிமி மழையும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}