தமிழ்நாட்டில் இன்று மழைக்கு பிரேக்.. சென்னையிலும் மழை இருக்காது.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Nov 09, 2024,10:24 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது. மழைக்கு பிரேக் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதற்கிடையே தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. 


அதேபோல் தென் மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. ‌ இது தவிர டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தென் தமிழகம் மற்றும் காவிரி டெல்டா பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது.   தமிழ்நாட்டில் இன்று பெரிய அளவில் மழை இருக்காது. மழைக்கு விடுமுறை நாளாக இருக்கும். இருந்தாலும் டெல்டா மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.  


அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில்  இன்று வெயில் அடிக்கும். மழைக்கு வாய்ப்பு இருக்காது என்ன தெரிவித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடையாமலை மற்றும் தக்கலையில் தலா 88.8 மில்லி மீட்டர் மழையும், கோலிப்போர்விளையில் 88.2 மிமி மழையும் பதிவாகியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்