சென்னை: சென்னையில் இன்று பகலில் வெப்பம் கொளுத்தினாலும், மாலையில் பரவலாக நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பருவநிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் பகல் நேரத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் அடித்த சுவடே தெரியாமல் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து விடுகிறது. நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்தில் ஆறு சென்டிமீட்டர் மழை பெய்தது.

ஜூலை மாதத்தில் சராசரியாக 10 cm மழை பெய்யும். அதில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திலேயே 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மழை குறித்த மீண்டும் ஒரு அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதன்படி, அரக்கோணத்தில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் எதிரொடியாக இன்று பகலில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய கூடும். இது தவிர கர்நாடக மாநிலம் குடகில் காவிரி நீர் பிடிப்பு பகுதியான கேஆர் எஸ் பகுதியிலும் கனமழை தொடரும்.
அதேபோல் வயநாடு காவிரி கபினி அணை பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில நாட்களில் கபினி அணை நிரம்பிவிடும். இதனால் கபினியில் இருந்து நேரடியாக மேட்டூருக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}