சென்னை: சென்னையில் இன்று பகலில் வெப்பம் கொளுத்தினாலும், மாலையில் பரவலாக நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பருவநிலை மாற்றத்தால் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்தாலும் பகல் நேரத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக இருந்து வருகிறது. வெயில் அடித்த சுவடே தெரியாமல் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து விடுகிறது. நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்தில் ஆறு சென்டிமீட்டர் மழை பெய்தது.
ஜூலை மாதத்தில் சராசரியாக 10 cm மழை பெய்யும். அதில் நேற்று முன்தினம் ஒரு மணி நேரத்திலேயே 6 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் சென்னையில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என ஏற்கனவே தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மழை குறித்த மீண்டும் ஒரு அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதன்படி, அரக்கோணத்தில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் எதிரொடியாக இன்று பகலில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்ய கூடும். இது தவிர கர்நாடக மாநிலம் குடகில் காவிரி நீர் பிடிப்பு பகுதியான கேஆர் எஸ் பகுதியிலும் கனமழை தொடரும்.
அதேபோல் வயநாடு காவிரி கபினி அணை பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒரு சில நாட்களில் கபினி அணை நிரம்பிவிடும். இதனால் கபினியில் இருந்து நேரடியாக மேட்டூருக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}