டெல்லி: டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட, உலகில் அதிகமாக வெறுக்கப்படும் 100 உணவுகள் கொண்ட பட்டியலில், இந்திய உணவான பஞ்சாப் மக்களின் பிரதான உணவு மிஸ்ஸி ரொட்டி 56 ஆவது இடத்தை பிடித்துள்ளது. வட இந்தியர்களின் பாரம்பரிய உணவு எப்படி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம், தமிழ்நாட்டில் பலரும் முகம் சுளிக்கும் ஆனால் அடிக்கடி வீடுகளில் செய்யப்படும் உப்புமாவுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது உப்புமா வெறியர்களுக்கு பெரும் ஆறுதலையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.
உலக அளவில் உணவுகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது டேஸ்ட் அட்லஸ் அமைப்பு. இந்த அமைப்பு, உணவு விமர்சகர்கள், சமையல் குறிப்புகள், உணவு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. அந்த வரிசையில் ஜனவரி 8, 2025 அன்று டேஸ்ட் அட்லஸ் 100 உணவுகள் கொண்ட உலகில் அதிகம் வெறுக்கப்படும் உணவுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய உணவான பஞ்சாப் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பாரம்பரிய உணவு, மிஸ்ஸி ரொட்டி 56வது இடத்தை பிடித்துள்ளது.
மிஸ்ஸி ரொட்டி என்பது முழு கோதுமை மாவு, உளுந்து மாவு, உப்பு, தண்ணீர், சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், கேரம் விதை தூள், மஞ்சள், கொத்தமல்லி மற்றும் உலர்ந்த மாதுளை விதைகள் சேர்த்து தயாரிக்கப்படும் புளிப்பில்லாத ரொட்டி வகையாகும். சமைத்தவுடன், இந்த ரொட்டி நெய்யில் டோஸ் செய்து பருப்புடன் (தால்) சேர்த்து பரிமாறப்படுகிறது.
மிகவும் மோசமான உணவு பட்டியலில் அயர்லாந்தின் பிளாட்பால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது ஒரு வகை பாலாடையில் செய்த உணவாகும். அடர்-பழுப்பு நிற பாலாடை, கம்பு மாவு, பார்லி மாவு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஜல்லீடு ஈல்ஸ், அமெரிக்காவின் பிராக் ஐ சாலட், ஸ்பெயினின் அகுலாஸ் ல கசுவா உள்ளிட்டவையும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}