டெல்லி: பொம்பளப் புள்ளைய அழ விடாதப்பா. பொண்ணுங்களை கண் கலங்காம பார்த்துக்கணும் என்று அந்தக் காலத்து பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம்.. இப்பெல்லாம் பெண்கள் ரொம்ப தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் மாறிட்டாங்க.. அவ்வளவு சீக்கிரமா யாரும் அவங்களை அழ வச்சுட முடியாது.. பட்.. இந்த ஸ்டோரி பெண்களோட "கண்ணீர்" பத்தினதுதான்.
இஸ்ரேலைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெய்ஸ்மேன் அறிவியல் கழகம். இந்த நிறுவனம் ஒரு வித்தியாசமான ஆய்வை மேற்கொண்டது. பெண்களின் கண்ணீர் குறித்து அது பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு ஆய்வில் வித்தியாசமான, சுவாரஸ்யமான முடிவு கிடைத்துள்ளதாம்.
அதாவது, பெண்களின் கண்ணீரில் சில வேதிப் பொருட்கள் இருப்பதாகவும், அது ஆண்களின் மூளையில் கோபத்தைத் தூண்டும் பகுதியை கட்டுப்படுத்துவதாகவும், இதனால் அவர்களின் கோபம் மட்டுப்பட்டு அவர்கள் சாந்தமடைய அது உதுவுவதாகவும் கூறுகிறது அந்த ஆய்வு. அதாவது பெண்களின் கண்ணீரை நுகர்ந்து பார்த்தால் இந்த "மாயாஜாலம்" நடக்கிறதாம்.
இது ஏற்கனவே எலிகளிடம் சகஜமாக இருக்கிறதாம். அதாவது பெண் எலிகள் விடும் கண்ணீரை ஆண் எலிகள் நுகர்ந்து பார்க்குமாம். அப்படிச் செய்த பிறகு ஆண் எலிகள் அமைதியாகி விடுமாம், அதன் கோபம், முரட்டுத்தனம் போய் விடுமாம். இந்த ஆய்வு தற்போது மனிதர்களிடமும் அதேபோன்ற விளைவை ஏற்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஆண்கள் சிலரையும், பெண்கள் சிலரையும் ஆய்வுக்குட்படுத்தினர். ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட ஆண்களிடம் பழி வாங்கும் உணர்வையும், கோபத்தையும் கொண்டு வந்துள்ளனர். அதன் பின்னர்,
பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கண்ணீரை ஆண்களிடம் கொடுத்து அதை நுகர்ந்து பார்க்கச் சொல்லியுள்ளனர். ஆனால் அது பெண்களின் கண்ணீர் என்பதை அவர்களுக்குச் சொல்லவில்லை. அதன் பிறகு அவர்களது மூளையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்காணித்துள்ளனர். அப்போது கண்ணீரை நுகர்ந்து பார்ப்பதற்கு முன்பு இருந்த அந்த வேகம், கண்ணீரை நுகர்ந்து பார்த்த பிறகு இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர். அதாவது 40 சதவீத அளவுக்கு அந்த எண்ணம் குறைந்திருந்ததாம்.
இதை எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் கண்டறிந்துள்ளனர். ஆண்களின் மூளையில் பிரிபிரன்டல் கார்டெக்ஸ் மற்றும் ஆன்டீரியர் இன்சுலா ஆகிய இரு பகுதிகளும் கோபம் தொடர்பானவை. இந்த இடத்தில்தான் அந்த பெண்களின் கண்ணீரில் இருந்த வேதிப் பொருட்கள் செயல்பட்டு கோபத்தைக் குறைத்துள்ளதாம். ஆய்வுக்கு முன்பு ஆக்டிவாக இருந்த இந்த பகுதிகள், கண்ணீரை நுகர்ந்த பின்னர் ஆக்டிவிட்டி குறைந்து காணப்பட்டதாம்.
ஆஹா.. இப்பத்தாய்யா புரியுது.. பெண்கள் அழுதா ஆண்கள் ஏன் பொட்டிப் பாம்பா அடங்கறாங்கன்னு!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}