தை அமாவாசை:  ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!

Feb 09, 2024,12:54 PM IST

ரமேஸ்வரம்: இன்று தை அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் நீராடி வழிபாடு செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.


தை அமாவாசை என்பது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளாய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியமானதாகும். வருடத்தின் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் இந்த மூன்று அமாவாசைகளில் தவறாமல் விரதம் இருந்து வழிபட்டால், வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்த பலன் கிடைத்து விடும் என்பார்கள். 


இந்த நாளில் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன் எனப்படும் தர்ப்பணம், படையல் போன்ற வழிபாடுகளை செய்தால் பித்ரு சாபம், பித்ரு தோஷம் ஆகியவை நீங்கும்.  இன்று நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை நம்முடைய முன்னோர்கள் நேரடியாக ஏற்பதாக சொல்லப்படுவதால் இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் மட்டுமின்றி நம்முடைய ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த பாவமும் நீங்கி, அவர்கள் மேல் உலகில் நற்கதி அடைவதாக ஐதீகம்.இப்படிப்பட்ட இந்த நன்னாளில் புனித தீர்த்தங்களில் மக்கள் நீராடி வழிபாடு செய்து வழக்கம்




இதன் காரணமாக ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் பக்தர்கள் வந்து நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வார்கள். அதன்பாடி இன்று  தை அமாவாசை என்பதால் ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.


மேலும், கன்னியாகுமரி,காவிரி கரை, வைகை கரை,திருச்செந்தூர், நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, பூம்புகார், திருவையாறு உள்ளிட்ட ஏராளமான  இடங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

அதிகம் பார்க்கும் செய்திகள்