தை அமாவாசை:  ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!

Feb 09, 2024,12:54 PM IST

ரமேஸ்வரம்: இன்று தை அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கடலில் நீராடி வழிபாடு செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.


தை அமாவாசை என்பது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆடி, தை மற்றும் புரட்டாசி மகாளாய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் முக்கியமானதாகும். வருடத்தின் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டாலும் இந்த மூன்று அமாவாசைகளில் தவறாமல் விரதம் இருந்து வழிபட்டால், வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருந்த பலன் கிடைத்து விடும் என்பார்கள். 


இந்த நாளில் பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன் எனப்படும் தர்ப்பணம், படையல் போன்ற வழிபாடுகளை செய்தால் பித்ரு சாபம், பித்ரு தோஷம் ஆகியவை நீங்கும்.  இன்று நாம் கொடுக்கும் தர்ப்பணங்களை நம்முடைய முன்னோர்கள் நேரடியாக ஏற்பதாக சொல்லப்படுவதால் இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதால் நம்முடைய பாவங்கள் மட்டுமின்றி நம்முடைய ஏழு தலைமுறை முன்னோர்கள் செய்த பாவமும் நீங்கி, அவர்கள் மேல் உலகில் நற்கதி அடைவதாக ஐதீகம்.இப்படிப்பட்ட இந்த நன்னாளில் புனித தீர்த்தங்களில் மக்கள் நீராடி வழிபாடு செய்து வழக்கம்




இதன் காரணமாக ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் பக்தர்கள் வந்து நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வார்கள். அதன்பாடி இன்று  தை அமாவாசை என்பதால் ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே அக்னி தீர்த்தக் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.


மேலும், கன்னியாகுமரி,காவிரி கரை, வைகை கரை,திருச்செந்தூர், நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, ஸ்ரீரங்கம், பவானி கூடுதுறை, பூம்புகார், திருவையாறு உள்ளிட்ட ஏராளமான  இடங்களில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்