- ச.அகல்யா
அம்மா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச...
காதலி, மனைவி, மகள் என மூன்றெழுத்து உறவுகள் வரலாம்.
அப்பா என்ற மூன்றெழுத்து உறவை மிஞ்ச...
காதலன், கணவன், குமாரன் என நான்கெழுத்து உறவுகள் வரலாம்.
ஆனால், தாய்மாமன் என்ற உறவை மிஞ்ச
எவராலும் முடியாது!
அது என்னவோ தெரியவில்லை...
தாய், தந்தை பாசத்தையும் மிஞ்சியது அவனின் பாசம்.
ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும்,
அவன் முகத்தில் புன்னகையை மட்டுமே நான் கண்டுள்ளேன்.
எத்தனை மாமன்கள் இருந்தாலும்,
'தாய்மாமன்' என்பவன் எப்போதும் என் கண்களுக்குச் சிறந்தவன் தான்.

தன் தங்கை மகளைத் தன் சொந்த மகள் என நினைத்தவன் அவன்.
என்னைத் தன் மகளாகக் கருதியவனுக்கு,
நான் இன்று ஒரு பதவி உயர்வு அளித்துள்ளேன்...
(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)
விருந்தோம்பல்.. தமிழர்களின் தனித்துவம்!
Constantine Poems: அன்புக் கடவுளே.. உனக்கு ஒரு யோசனை!
கவி கலையின் இரு கவிதைகள்!
எத்தனை மாமன்கள் இருந்தாலும்.. 'தாய்மாமன்'!
சன்னலோரம் எனது ஈரக் கண்களை இயல்பாய் சுழற்றினேன்!
அவளா... இவள்!?
உன் அருமையை மறந்தோம்.. மரங்கள்!
நீரில்லை நீயில்லை... நீரின்றி உயிர் இல்லை !
Monday Motivation: புதையுண்டு காத்திருந்தேன்.. பல்லூழிக்காலமாய்.. காலம் உயர்த்தும்!
{{comments.comment}}