டெல்லி: 98 வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சினிமா உலகின் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது ஆகும். இந்த உயரிய விருதை வாங்குவதே ஒவ்வொரு திரைப்பட நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்த ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.இந்த விழாவில், அனோரா திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்பட எடிட்டிங் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை என ஐந்து விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் எனவும், இந்த விருதுக்கான பரிந்துரைகள் முன்னதாக, ஜனவரி 22 ஆம் தேதி தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் வி.ஐ.பி பாதுகாப்பு முறைகள்.. என்னெல்லாம் இருக்கு தெரியுமா?
யார்...?
மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு
குன்றெல்லாம் குமரன்!
National Newspaper Day.. அச்சு ஊடகத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றுவோமா?
பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!
நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!
{{comments.comment}}