டெல்லி: 98 வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சினிமா உலகின் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது ஆகும். இந்த உயரிய விருதை வாங்குவதே ஒவ்வொரு திரைப்பட நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்த ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.இந்த விழாவில், அனோரா திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்பட எடிட்டிங் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை என ஐந்து விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் எனவும், இந்த விருதுக்கான பரிந்துரைகள் முன்னதாக, ஜனவரி 22 ஆம் தேதி தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட உள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}