டெல்லி: 98 வது ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சினிமா உலகின் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர் விருது ஆகும். இந்த உயரிய விருதை வாங்குவதே ஒவ்வொரு திரைப்பட நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்த ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.இந்த விழாவில், அனோரா திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்பட எடிட்டிங் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை என ஐந்து விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் எனவும், இந்த விருதுக்கான பரிந்துரைகள் முன்னதாக, ஜனவரி 22 ஆம் தேதி தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட உள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}