- க. யாஸ்மின் சிராஜூதீன்
ஆசையே அலைபோல...
வாசமான மலர்போல...
கார்மேகம் மழைபோல...
மனச பிடிச்ச வலையாலே
முழுக்க படர்ந்த கொடிபோல
ஒன்றிரண்டு என்றென்ன
ஆல்போல் தழைத்து
அருகுபோல் வேரூன்றி
ஆடம்பரம் வீட்டில் ஆட

ஆசை கோலம்தான்
மிகவும் பெரிசுதான்
அளவுக்கு மீறினால்
அமிர்தமும்
நஞ்சுதான்....
விரலுக்கேத்த வீக்கம்தான்...
பேராசை பெருநட்டம்தான்
பழமொழி அன்றே சொன்னதுதான்...
அடிபடும்முன்னே அறிந்திடு
தேவைக்கு மட்டும் ஆசையே
வெற்றுப்பகட்டு வேணாமே
ஆசை அலை ஓயாதே !!!
பிறப்பு இறப்புக்கிடையிலே
சிசு முதல் பரன் வரையிலே...
வேடம் பருவத்திற்கேற்பதான்
கூடி வாழ ஆசைகொள்
நோயின்றி வாழ ஆசைகொள்
பகிர்ந்து உண்ண ஆசைகொள்
விட்டுக்கொடுக்க ஆசைகொள்
ஆசை நிறைய உண்டுதான்
முடிவு என்பது இல்லைதான் ...
வேண்டும் மட்டும் தேர்ந்தெடு
ஆசை வாழ்க்கை வாழ்ந்திடு.
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}