அன்பெனும் பெருமழை!

Dec 23, 2025,10:50 AM IST

- ப ந ராஜேஷ் கண்ணா


அன்பு என்னும் சொல் 

மூன்றெழுத்தில் முடிவது.

அதன் உணர்வுகளை 

எழுத்துக்களால் 

அடக்கமுடியாது.


அன்பு கடலைப் போன்று 

விசாலமானது.

அதன் அளவை 

அளவிடமுடியாது.


மணற்கேணியைப் போன்று 

ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும். 

அன்பை அனுபவிப்பதற்கு 

மனதை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும். 




அன்பென்னும் பெருமழையில் நனைந்து 

மகிழ்ச்சி கடலில் மூழ்கி 

திளைத்து இருப்பார்கள்.


விசாலமான பார்வையால் - 

அன்பை மிகவும் ஆழமாக பார்க்க முடியும்!


அன்பை பலவகைகளில்

விவரிக்கலாம்!

எதையும் எதிர்பார்க்காமல் காட்டும் அன்பு!

எதையோ எதிர்பார்த்துக் காட்டும் அன்பு!


பெற்றோர் தம் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு! 

முதியவர்கள் பேரக் குழந்தைகளின் மீது காட்டும் அன்பு! 

இயற்கை பூமியின் மீது காட்டும் அன்பு!

பிள்ளைகள் பெற்றோர் மீது காட்டும் அன்பு!


அன்னை தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பானது 

இயற்கை பூமியின் மீது காட்டும் அன்பைப் போன்றதாகும்!

இரண்டுமே அளவில்லாமல் பொழிந்து மகிழ்ச்சி கடலில் திளைக்க வைக்கும்! 


நீர் மேகங்கள் மேல் கொண்ட அன்பால் 

சூரியன் காட்டும் அன்பு வானவில்லாக வெளிப்படுகிறது. 


மலர்கள் மேல் கொண்ட அன்பால் 

வண்ணத்துப்பூச்சிகள் காட்டும் அன்பு 

அம் மலர்களை பூத்துக் குலுங்க செய்யும்!


வேர்கள் மேல் கொண்ட அன்பால் 

பூமி தன்னுள் செல்ல அனுமதித்து பெரிய விருட்சமாக மாறச் செய்கிறது.


எப்படி அம்மா தன் பிள்ளைகள் மீது காட்டும் அன்பை அளவிட முடியாத அது போன்று அன்பைப் பற்றி மேற்கூறிய செய்திகளோடு நிறுத்தி விட முடியாது. 


அது அள்ள அள்ள குறையாது 

அனுபவிக்க அனுபவிக்க திளைக்காது.


இவை அனைத்தையும் எழுதுவதற்கு நான் எழுத்துக்கள் மேல் , 

தமிழின் மேல் கொண்ட அன்பால் மட்டுமே சாத்தியமானது!


ஆம் அன்பு என்பது பெரும்பாலும் பெரும் மழை தான் பெருமழை!

 


(ப ந ராஜேஷ் கண்ணா, பட்டதாரி ஆசிரியர், அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி, திருவூர், திருவள்ளூர் மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கண்ணாடியே கண்ணாடியே.. A Conversation With Mirror!

news

விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன்.. ஜோதிடம் அறிவோமா?

news

விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம்.. இயற்கை வழி நடப்போம்!

news

விதையால் ஆயுதம் செய்வோம்.. விவசாயிகள் தினத்தன்று இந்த உறுதியை எடுப்போம்!

news

பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு

news

National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!

news

அன்னை யசோதா பாலகனே.. பிருந்தாவன கோபாலனே!

news

உதயநிதியை முதல்வராக்குவதே திமுக.,வின் முக்கிய நோக்கம்...நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

அதிகம் பார்க்கும் செய்திகள்