டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து, இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 28 பேர் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, உலக நாடுகளுடன் நட்புறவுடன் செயல்பட்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து ராணுவ வீரர்கள் போல் உடைய அணிந்து இந்தியாவிற்குள் ஊடுருவி சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து விரைந்து அவசர அவசரமாக இந்தியாவுக்கு வந்த அவர் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.

அதன்படி, இந்தியாவிற்குள் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தானியர்களுக்கு இனி விசாக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்:
இந்தியாவில் சார்க் விசா பெற்று வந்துள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. அவர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்கள் குடும்பம் குடும்பமாக அட்டாரி- வாகா எல்லை வழியாக தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
அதேபோல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
பணமும் ரசிகர்களும்!
கடந்த 2 நாட்களாக சரிவில் இருந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு... அதுவும் எவ்வளவு உயர்வு தெரியுமா?
Year in Search 2025.. அதிகம் தேடப்பட்ட சமையல் குறிப்புகள்.. ஆஹா அது இருக்கா.. சூப்பரப்பு!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருமுருகாற்றுப் படை.!!!
கீழக்கரை அருகே விபரீதம்.. சாலையோரம் நின்றிருந்த கார் மீது இன்னொரு கார் மோதி விபத்து!
அமுதமாய் மனம் நிறைந்த கோபாலனே.. பார்த்தனின் பார்த்தசாரதியே.. புருஷோத்தமனே!
{{comments.comment}}