பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!

Apr 24, 2025,06:35 PM IST

டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து, இந்தியாவிற்குள்  பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய  அரசு.


பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 28 பேர் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


முன்னதாக, உலக நாடுகளுடன் நட்புறவுடன் செயல்பட்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இந்தியாவுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. அந்த வகையில்  இரண்டு நாட்களுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு சென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து ராணுவ வீரர்கள் போல் உடைய அணிந்து இந்தியாவிற்குள் ஊடுருவி  சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதல் சம்பவத்தை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து விரைந்து அவசர அவசரமாக இந்தியாவுக்கு  வந்த அவர் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளார்.




அதன்படி,  இந்தியாவிற்குள் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளார். அதேபோல் இந்தியாவுக்கு வரும் பாகிஸ்தானியர்களுக்கு  இனி விசாக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். 


இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்தியாவிற்குள் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவிலிருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்:


இந்தியாவில் சார்க் விசா பெற்று வந்துள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. அவர்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து இந்தியாவுக்கு வந்திருந்த பாகிஸ்தானியர்கள் குடும்பம் குடும்பமாக அட்டாரி- வாகா எல்லை வழியாக தங்கள் நாட்டிற்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் எல்லை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


அதேபோல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரத்திற்கு  அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும் மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

பீகாரில் விறுவிறுப்பான சட்டசபைத் தேர்தல்.. சுறுசுறுப்பான முதல் கட்ட வாக்குப் பதிவு

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

ஐப்பசி கிருத்திகை.. முருகனுக்கு உகந்த நாள்.. விரதம் இருந்தால் வேண்டியது கிடைக்கும்

news

சும்மா இருக்கும் மனம் தெய்வீகத்தின் பட்டறை/பணியிடம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 06, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்