- கவிதா அறிவழகன்
இறைவனின் அழகிய படைப்புகளில் ஒன்று
ஆன்மா!
அழகிய இதயத்தினுள்
சப்தமில்லாமல் ஒளிந்து
கொண்டிருக்கிறது!
அது நமது பயணங்களின்
வழிகாட்டியாகவும்,
நாம் செய்யும் செயல்களிலும்,
நாம் பேசும் சொற்களிலும்,
துணை நிற்கின்றது!
நம்மில் சில ஆன்மாக்கள்
மரணத்தின் விளிம்பில் இருக்கையில்,
ஆன்மாவின் வலிகளும்,
வேதனைகளும்,
வார்த்தைகளால் மதிப்பிடமுடியவில்லை!

ஆண்டவனின் படைப்புகளில்
இந்த வேதனைக்கு ஏன்
பதில் இல்லை?
பதில் இல்லையெனினும்,
நம்பிக்கை மட்டும்
ஆன்மாவின் மௌன வெளிச்சமாக
எஞ்சுகிறது!
நான் இறைவனின்
பாதங்களில்
என் கோரிக்கையை
வைக்கின்றேன்!
எல்லா ஆன்மாக்களின்
புண்ணியங்களை
கணக்கிட்டு,
அவற்றை
இறைவனின் திருப்பாதங்கள்
சேரட்டும்!
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}