- கவிதா அறிவழகன்
இறைவனின் அழகிய படைப்புகளில் ஒன்று
ஆன்மா!
அழகிய இதயத்தினுள்
சப்தமில்லாமல் ஒளிந்து
கொண்டிருக்கிறது!
அது நமது பயணங்களின்
வழிகாட்டியாகவும்,
நாம் செய்யும் செயல்களிலும்,
நாம் பேசும் சொற்களிலும்,
துணை நிற்கின்றது!
நம்மில் சில ஆன்மாக்கள்
மரணத்தின் விளிம்பில் இருக்கையில்,
ஆன்மாவின் வலிகளும்,
வேதனைகளும்,
வார்த்தைகளால் மதிப்பிடமுடியவில்லை!

ஆண்டவனின் படைப்புகளில்
இந்த வேதனைக்கு ஏன்
பதில் இல்லை?
பதில் இல்லையெனினும்,
நம்பிக்கை மட்டும்
ஆன்மாவின் மௌன வெளிச்சமாக
எஞ்சுகிறது!
நான் இறைவனின்
பாதங்களில்
என் கோரிக்கையை
வைக்கின்றேன்!
எல்லா ஆன்மாக்களின்
புண்ணியங்களை
கணக்கிட்டு,
அவற்றை
இறைவனின் திருப்பாதங்கள்
சேரட்டும்!
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}