- கவிதா அறிவழகன்
இறைவனின் அழகிய படைப்புகளில் ஒன்று
ஆன்மா!
அழகிய இதயத்தினுள்
சப்தமில்லாமல் ஒளிந்து
கொண்டிருக்கிறது!
அது நமது பயணங்களின்
வழிகாட்டியாகவும்,
நாம் செய்யும் செயல்களிலும்,
நாம் பேசும் சொற்களிலும்,
துணை நிற்கின்றது!
நம்மில் சில ஆன்மாக்கள்
மரணத்தின் விளிம்பில் இருக்கையில்,
ஆன்மாவின் வலிகளும்,
வேதனைகளும்,
வார்த்தைகளால் மதிப்பிடமுடியவில்லை!

ஆண்டவனின் படைப்புகளில்
இந்த வேதனைக்கு ஏன்
பதில் இல்லை?
பதில் இல்லையெனினும்,
நம்பிக்கை மட்டும்
ஆன்மாவின் மௌன வெளிச்சமாக
எஞ்சுகிறது!
நான் இறைவனின்
பாதங்களில்
என் கோரிக்கையை
வைக்கின்றேன்!
எல்லா ஆன்மாக்களின்
புண்ணியங்களை
கணக்கிட்டு,
அவற்றை
இறைவனின் திருப்பாதங்கள்
சேரட்டும்!
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!
பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை
Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!
வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!
மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!
கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!
தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்
கம்பனும் கவியும்
என் இராமனே!
{{comments.comment}}