திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மேயர் தேர்தலில் திமுக சார்பில் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகர மேயராக இருந்தவர் பி.எம்.சரவணன். இவர் மீது திமுக கவுன்சிலர்களிடையே கடும் அதிருப்தி எழுந்து போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அடுத்த மேயர் வேட்பாளரைத் தேர்வு செய்ய இன்று திமுக கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் திமுக மேலிடம் சார்பில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் இறுதியில் மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 25வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். திருநெல்வேலி டவுன் பகுதியைச் சேர்ந்தவர். மிக மிக எளிமையானவர். எளிதில் இவரை அணுக முடியும். 3வது முறையாக அவர் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
கடந் 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருநெல்வேலி மாநகராட்சியில் இதுவரை 5 முறை மேயர் பதவிக்கு தேர்தல் நடந்துள்ளது. முதல் தேர்தல் 1996ல் நடந்தது. திமுக சார்பில் உமா மகேஸ்வரி முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2001ல் அதிமுகவின் ஜெயராணி, 2006ல் திமுகவின் ஏ.எல். சுப்ரமணியன், 2011ல் அதிமுகவின் விஜிலா சத்தியானந்த், 2014ல் அதிமுகவின் புவனேஸ்வரி, 2022ல் திமுகவின் பி.எம்.சரவணன் ஆகியோர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக மற்றும் அதிமுக சார்பில் தலா 3 மேயர்கள் இதுவரை பதவி வகித்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் திமுக வசம் 44 பேரும், திமுக கூட்டணி சார்பில் 7 பேரும் (காங்கிரஸ் 3, மதிமுக, சிபிஎம், மார்க்சிஸ்ட் மற்றும் சுயேச்சை தலா 1), அதிமுகவில் 4 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}