திருப்பள்ளியெழுச்சி பாடல் 02 - அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

Jan 07, 2024,09:08 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 02 :


அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

அகன்றது உதயம் நின் மலர்த் திருமுகத்தின்

கருணையின் சூரியன் எழ எழ நயனக் கடிமலர் மலர

மற்றண்ணல் அங்கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே

பள்ளி எழுந்தருளாயே.




பொருள் :


சூரியனின் தேரோட்டியாகிய அருணன், சூரிய பகவான் உலா வரும் தேரினை இந்திரனுக்குரிய திசையாகிய கிழக்கு திசையில் நோக்கி செலுத்தி, சூரியன் கிழக்கு பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறான். இதுவரை படர்ந்து இருந்த இரவின் இருள் விலகி விட்டது. உதயமான சூரியனின் வெளிச்சம் வர துவங்கி விட்டது. சூரியன் எப்படி மெதுவாக கிழக்கில் இருந்து எழுகிறாரோ அதே போல் கருணை நிறைந்த உன்னுடைய திருமுகம் மலர்ந்து நீயும் எழுந்து கொள்ள வேண்டும். விடியல் வந்ததும் மலர்வதற்காக காத்திருக்கும் மலரில் தேன் குடிப்பதற்காக ரீங்காரம் இட்டு மொய்த்துக் கொண்டிருக்கும் வண்டுகளைப் போல், உன்னுடைய திருமுகம் மலர்ந்து அதிலிருந்து சுரக்கும் அருள் தேனை பருகுவதற்காக அடியார்கள் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அருள் என்னும் செல்வத்தையும், மலை போல் ஆனந்தத்தையும் தருவதற்காக கடல் அலை போல் ஓயாமல் காத்துக் கொண்டிருக்கும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்டுள்ள சிவ பெருமானே, தூக்கம் களைந்து எழ வேண்டும். 


விளக்கம் :


இறைவனின் அழகையும், அவரின் அருள் திறத்தையும் இயற்கையோடு ஒப்பிட்டு வர்ணித்து சொல்வது ஒரு மரபு. அதன் அடிப்படையில் சிவ பெருமானின் முகத்தின் அழகை மலர்களுடனும், தேனுடனும் ஒப்பிட்டு சொல்கிறார் மாணிக்கவாசகர். சிவ பெருமானின் அக்னி வடிவமாகவும், ஜோதி பிளம்பாகவும் திகழ்பவர். அதனாலேயே இந்த பாடலில் சூரியனை உவமையாக கொண்டு பாடலை துவக்குகிறார். உண்மையான பக்தர்கள் இறைவனின் அருளை மட்டுமே வேண்டுவார்கள் என்பதை அருளையே நிதியாக தர வேண்டும் என கேட்கிறார். உலக இன்பங்களின் மேல் நாட்டம் உள்ளவர்களே பொன், பொருள் வேண்டும் என இறைவனிடம் வேண்டுவார்கள். ஆனால் சிவனின் மீது பக்தி கொண்டவர்கள் அவரின் அருளை மட்டுமே அள்ள அள்ள குறையாத செல்வமாக வேண்டும் என்றும் கேட்பார்கள். இறைவனின் கருணையே வடிவானவன் என்பதால் நிறைவான ஆனத்தத்தை மலை அளவிற்கு தருவார் என்றும் மாணிக்கவாசகர் இந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்