திருப்பள்ளியெழுச்சி பாடல் 05 - பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்

Jan 10, 2024,09:40 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 05 :


பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

சிந்தனைக் கும்அரி யாயெங்கள் முன்வந்து

ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!


பொருள் : 




இயற்கை வளங்கள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறை தலத்தை ஆட்சி செய்து வரும் மன்னனாகிய சிவ பெருமானே! பஞ்ச பூதங்களின் வடிவமாக விளங்குபவன் நீ. பிறப்பு-இறப்பு இல்லாதவன் நீ என உன்னை அறிந்த ஞானியர்களும், புலவர்களும் பாடல்களில் உன்னை பற்றி பாடி உள்ளனர். அதைக் கேட்டும், பாடியும், ஆடியும் மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் நீ எப்படி இருப்பாய் என இதுவரை யாராவது முழுவதுமாக அறிந்திருக்கிறார்கள் என நாங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை. மனிதர்களின் சிந்தனைக்கு அற்பாட்பட்டவனே! எங்கள் முன் வந்து, எங்களுடைய பிழைகளை மன்னித்து, ஆட்கொண்டு அருள வேண்டும். உன்னுடைய அருளை வேண்டி நிற்கும் அடியார்களுக்கு அருள் வழங்குவதற்காக தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டும்.


விளக்கம் :


இறைவன் எப்படிப்பட்ட உருவத்தை உடையவர், எப்படிப்பட்ட குணங்களை உடையவர் என்பதும் ஞானியர்களும், முனிவர்களும் பாடி வைத்த பாடல்களின் மூலமே அவரை அறிகிறோம். ஆனால் இறைவன் எப்படி இருப்பார்? அவருடைய உருவம் எப்படி இருக்கும் என யாரும் முழுவதுமாக அறிந்து கொண்டது கிடையாது. இறைவன் இப்படித் தான் இருப்பார் என யாராவது ஆய்வு செய்து கண்டறிய முயன்றால் அது அவர்களின் அறியாமையையே காட்டும். மனிதர்களின் சிந்தனைக்கும், கற்பனைக்கும் எட்ட முடியாதவன் இறைவன். அவன் பிறப்பும், இறப்பும் இல்லாதவன். பஞ்ச பூதங்கள் உள்ளிட்ட அனைத்து வடிவமாகவும் இறைவன் இருக்கிறார். அனைத்து இடங்களிலும் இருந்தாலும் அவர் இப்படி தான் இருப்பார் என இதுவரை எவர் ஒருவரும் கண்டது கிடையாது. இறைவனுக்கு உருவம் என்பது முக்கியமல்ல. அவர் அனைவருக்கும் சமமானவர் என்பதை இந்த பாடலில் மாணிக்கவாசகர் விளக்கி உள்ளார். நம்முடைய பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டு, அருளைத் தான் நாம் வேண்டிப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்