திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 - புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்

Jan 15, 2024,08:04 AM IST

திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :


புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற ஆறென்று நோக்கித்

திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின்

அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்

அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே

பள்ளி எழுந்தருளாயே.




பொருள் :


பூமியில் பிறக்காமல், வைகுண்டத்திலோ அல்லது பிரம்மலோகத்திலோ வாழ்வதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்காது. பிரம்மா, விஷ்ணு உலகத்தில் வாழ்பவர்கள். தங்களின் வினைப் பயனை அனுபவிக்க முடியுமே தவிர, அதிலிருந்து விடுபட முடியாது. சிவ பெருமானின் அருளை பெற வேண்டுமானால், இந்த பூமியில் பிறந்து, அவனை வணங்க வேண்டும். சிவனின் கருணையை பெறுவதற்காக இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் என பிரம்மாவும், திருமாலும் கூட இந்த பூமியில் வந்து பிறக்க விரும்புவார்கள். பூமியில் உள்ள அனைவரையும் ஆட்கொண்டு அருள் செய்யக் கூடியவர் திருப்பெருந்துறையில் வாழும் சிவ பெருமான் மட்டுமே. ஆகையால் எங்களுக்கு அருள் செய்ய நீ எழுந்தருள வேண்டும்.


விளக்கம் :


பூமியில் இருப்பவர்கள் வைகுண்டத்தை அடைய வேண்டும், பிரம்ம லோகத்தை அடைந்து மரணத்திற்கு பிறகும் சுகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, தாங்கள் செய்த வினைகளுக்கான பலன்களை அனுபவித்து கழிக்க வேண்டும். இறைவனுடன் கலந்து மறுபிறவி இல்லாத நிலையை பெற வேண்டும் என ஒருவரும் நினைப்பது கிடையாது. இதனால் இந்த பூமியில் வாழும் வாழ்க்கையை வீணாக வீணடித்துக் கொண்டிருக்கிறார். சிவனை வணங்கி, பக்தி செய்வது மட்டுமே நம்முடைய வினைகள் நீங்குவதற்கான ஒரே வழி. அவர் மட்டுமே நம்முடைய பாவ-புண்ணியங்களை நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை நமக்கு தந்து அருள கூடிய ஒரே நபர் என மாணிக்கவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி

news

மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்