திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :
புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற ஆறென்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின்
அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே
பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
பூமியில் பிறக்காமல், வைகுண்டத்திலோ அல்லது பிரம்மலோகத்திலோ வாழ்வதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்காது. பிரம்மா, விஷ்ணு உலகத்தில் வாழ்பவர்கள். தங்களின் வினைப் பயனை அனுபவிக்க முடியுமே தவிர, அதிலிருந்து விடுபட முடியாது. சிவ பெருமானின் அருளை பெற வேண்டுமானால், இந்த பூமியில் பிறந்து, அவனை வணங்க வேண்டும். சிவனின் கருணையை பெறுவதற்காக இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் என பிரம்மாவும், திருமாலும் கூட இந்த பூமியில் வந்து பிறக்க விரும்புவார்கள். பூமியில் உள்ள அனைவரையும் ஆட்கொண்டு அருள் செய்யக் கூடியவர் திருப்பெருந்துறையில் வாழும் சிவ பெருமான் மட்டுமே. ஆகையால் எங்களுக்கு அருள் செய்ய நீ எழுந்தருள வேண்டும்.
விளக்கம் :
பூமியில் இருப்பவர்கள் வைகுண்டத்தை அடைய வேண்டும், பிரம்ம லோகத்தை அடைந்து மரணத்திற்கு பிறகும் சுகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, தாங்கள் செய்த வினைகளுக்கான பலன்களை அனுபவித்து கழிக்க வேண்டும். இறைவனுடன் கலந்து மறுபிறவி இல்லாத நிலையை பெற வேண்டும் என ஒருவரும் நினைப்பது கிடையாது. இதனால் இந்த பூமியில் வாழும் வாழ்க்கையை வீணாக வீணடித்துக் கொண்டிருக்கிறார். சிவனை வணங்கி, பக்தி செய்வது மட்டுமே நம்முடைய வினைகள் நீங்குவதற்கான ஒரே வழி. அவர் மட்டுமே நம்முடைய பாவ-புண்ணியங்களை நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை நமக்கு தந்து அருள கூடிய ஒரே நபர் என மாணிக்கவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!
ஒரு அதிகாரத்திற்கு ஒரு பாடல்.. 24 வரிகளில் 133 கவிதை.. சென்னையில் திருக்குறள் போட்டி!
உலக சாதனை நல்லாசிரியர் லதாவின் புயலில் மலரும் பூக்கள்.. அமைச்சர் கே.என். நேரு வெளியிட்டார்
சைபர் சென்சார்னா என்னனு தெரியுமா?
வெவ்வேறு பெயர்களாய் மிளிர்ந்தாலும்... பெண்!
சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு...ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள் மூடல்
அம்மான்னா சும்மா இல்லடா.. இன்று என்ன நாள் தெரியுமா மக்களே!
உரிமைத்தொகை ஒருபுறம்; உயிர் அச்சம் மறுபுறம் - பெண்களைக் காக்கத் தவறிய திமுக அரசு: சீமான் ஆவேசம்!
சிறுநீரகங்களை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோமா?
{{comments.comment}}