திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 :
புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற ஆறென்று நோக்கித்
திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின்
அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே
பள்ளி எழுந்தருளாயே.

பொருள் :
பூமியில் பிறக்காமல், வைகுண்டத்திலோ அல்லது பிரம்மலோகத்திலோ வாழ்வதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்காது. பிரம்மா, விஷ்ணு உலகத்தில் வாழ்பவர்கள். தங்களின் வினைப் பயனை அனுபவிக்க முடியுமே தவிர, அதிலிருந்து விடுபட முடியாது. சிவ பெருமானின் அருளை பெற வேண்டுமானால், இந்த பூமியில் பிறந்து, அவனை வணங்க வேண்டும். சிவனின் கருணையை பெறுவதற்காக இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் என பிரம்மாவும், திருமாலும் கூட இந்த பூமியில் வந்து பிறக்க விரும்புவார்கள். பூமியில் உள்ள அனைவரையும் ஆட்கொண்டு அருள் செய்யக் கூடியவர் திருப்பெருந்துறையில் வாழும் சிவ பெருமான் மட்டுமே. ஆகையால் எங்களுக்கு அருள் செய்ய நீ எழுந்தருள வேண்டும்.
விளக்கம் :
பூமியில் இருப்பவர்கள் வைகுண்டத்தை அடைய வேண்டும், பிரம்ம லோகத்தை அடைந்து மரணத்திற்கு பிறகும் சுகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர, தாங்கள் செய்த வினைகளுக்கான பலன்களை அனுபவித்து கழிக்க வேண்டும். இறைவனுடன் கலந்து மறுபிறவி இல்லாத நிலையை பெற வேண்டும் என ஒருவரும் நினைப்பது கிடையாது. இதனால் இந்த பூமியில் வாழும் வாழ்க்கையை வீணாக வீணடித்துக் கொண்டிருக்கிறார். சிவனை வணங்கி, பக்தி செய்வது மட்டுமே நம்முடைய வினைகள் நீங்குவதற்கான ஒரே வழி. அவர் மட்டுமே நம்முடைய பாவ-புண்ணியங்களை நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை நமக்கு தந்து அருள கூடிய ஒரே நபர் என மாணிக்கவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகிறார்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}