மார்கழி 12 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 12.. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

Dec 26, 2024,04:58 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 12 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 12.. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி


திருப்பாவை பாசுரம் 12 :


கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திரளாய் ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்




பொருள் :


பசியால் வாடிடும் தங்களின் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே எருமைகள் தங்கம் மடியில் பாலை சுரக்க துவங்கி விடும். அப்படி பாலை சிந்திய படியே அவை இங்கும் அங்கும் சென்றதால் வாசல்கள் சேறாக்கி உள்ளன. இந்த அளவிற்க செழுமையாக பால் சுரக்கும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு வாலில் நாங்கள் காத்து நின்று கொண்டிருக்கிறோம். சீதையை கவர்ந்து சென்ற ராணவனின் மீது கோபம் கொண்டு அவனை அழிப்பதற்காக ராமராக அவதாரம் எடுத்த கோமகனாகிய அந்த நாராயணனின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடன் பேசாவிட்டாலும், அத்தகைய சிறப்பு வாய்ந்த நாராயணனை போற்றி பாடுவதற்காகவாவது வாயை திறக்க மாட்டாயா? நீயோ இன்னும் பேசாமல் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. அனைவரும் எழுந்து விட்ட பிறகும் உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பேருறக்கம்?



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!

news

தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

news

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

news

திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

news

நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!

news

சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

news

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!

news

திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்

அதிகம் பார்க்கும் செய்திகள்