- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 12 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 12.. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
திருப்பாவை பாசுரம் 12 :
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திரளாய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

பொருள் :
பசியால் வாடிடும் தங்களின் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே எருமைகள் தங்கம் மடியில் பாலை சுரக்க துவங்கி விடும். அப்படி பாலை சிந்திய படியே அவை இங்கும் அங்கும் சென்றதால் வாசல்கள் சேறாக்கி உள்ளன. இந்த அளவிற்க செழுமையாக பால் சுரக்கும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு வாலில் நாங்கள் காத்து நின்று கொண்டிருக்கிறோம். சீதையை கவர்ந்து சென்ற ராணவனின் மீது கோபம் கொண்டு அவனை அழிப்பதற்காக ராமராக அவதாரம் எடுத்த கோமகனாகிய அந்த நாராயணனின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடன் பேசாவிட்டாலும், அத்தகைய சிறப்பு வாய்ந்த நாராயணனை போற்றி பாடுவதற்காகவாவது வாயை திறக்க மாட்டாயா? நீயோ இன்னும் பேசாமல் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. அனைவரும் எழுந்து விட்ட பிறகும் உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பேருறக்கம்?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}