- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 12 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 12.. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
திருப்பாவை பாசுரம் 12 :
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திரளாய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்
பொருள் :
பசியால் வாடிடும் தங்களின் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே எருமைகள் தங்கம் மடியில் பாலை சுரக்க துவங்கி விடும். அப்படி பாலை சிந்திய படியே அவை இங்கும் அங்கும் சென்றதால் வாசல்கள் சேறாக்கி உள்ளன. இந்த அளவிற்க செழுமையாக பால் சுரக்கும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு வாலில் நாங்கள் காத்து நின்று கொண்டிருக்கிறோம். சீதையை கவர்ந்து சென்ற ராணவனின் மீது கோபம் கொண்டு அவனை அழிப்பதற்காக ராமராக அவதாரம் எடுத்த கோமகனாகிய அந்த நாராயணனின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடன் பேசாவிட்டாலும், அத்தகைய சிறப்பு வாய்ந்த நாராயணனை போற்றி பாடுவதற்காகவாவது வாயை திறக்க மாட்டாயா? நீயோ இன்னும் பேசாமல் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. அனைவரும் எழுந்து விட்ட பிறகும் உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பேருறக்கம்?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
{{comments.comment}}