- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 12 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 12.. கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
திருப்பாவை பாசுரம் 12 :
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திரளாய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

பொருள் :
பசியால் வாடிடும் தங்களின் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே எருமைகள் தங்கம் மடியில் பாலை சுரக்க துவங்கி விடும். அப்படி பாலை சிந்திய படியே அவை இங்கும் அங்கும் சென்றதால் வாசல்கள் சேறாக்கி உள்ளன. இந்த அளவிற்க செழுமையாக பால் சுரக்கும் எருமைகளுக்கு சொந்தகாரனான ஆயனின் தங்கையே! கொட்டும் பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு வாலில் நாங்கள் காத்து நின்று கொண்டிருக்கிறோம். சீதையை கவர்ந்து சென்ற ராணவனின் மீது கோபம் கொண்டு அவனை அழிப்பதற்காக ராமராக அவதாரம் எடுத்த கோமகனாகிய அந்த நாராயணனின் பெருமைகளை பாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடன் பேசாவிட்டாலும், அத்தகைய சிறப்பு வாய்ந்த நாராயணனை போற்றி பாடுவதற்காகவாவது வாயை திறக்க மாட்டாயா? நீயோ இன்னும் பேசாமல் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே. அனைவரும் எழுந்து விட்ட பிறகும் உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பேருறக்கம்?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!
2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்
டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி
அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை
குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு
ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்
விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்
True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!
{{comments.comment}}