திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தற்போது 2660 அடி உயர மலையில் ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஓம் நமச்சிவாயா, சிவாய நமஹ உள்ளிட்ட கோஷங்களை முழங்கி லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம் செய்து மகிழ்ந்தனர். மலை மீது தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுதும் மக்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
கடந்த வாரத்திற்கு முன்பாக ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் பகுதியான அரைமலை எனப்படும் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். இது அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால், கார்த்திகை தீபம் ஏற்றப்படும் அன்று மலையில் பக்தர்களை அனுமதிப்பது பாதுகாப்பானதாக இருக்குமா எனக் கேள்வி எழுந்தது.
இதனை அடுத்து 8 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் கார்த்திகை தீபம் ஏற்ற செல்லும் மலைப்பாதையில் சேறும் சகதியுமாகவும் வழுக்கும் நிலையில் இருப்பதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை மலைக்கு செல்ல அனுமதிப்பது மிக கடினம் என அக்குழுவினர் அறிக்கை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து தற்போது மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாகவே திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் பரவலாக கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலைப்பாதைகளில் மேலும் பாதைகள் மோசமாகி உள்ளன. இதனால் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலைப்பாதைகளில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சுமார் 6 அடி உயரம், 350 கிலோ எடை கொண்டு பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்ட ராட்சத கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்றே மழையை கூட பொருட்படுத்தாமல் கோவில் ஊழியர்கள் அதனை மலைக்கு கொண்டு சென்று தயார் நிலையில் வைத்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் தீபத்திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாவது நாளான இன்று காலை கார்த்திகை தீபத் திருநாளான டிசம்பர் 13 ஆம் தேதி கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த பரணி தீபத்தை காண கோயிலின் உள்ளே 7,500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் மாலையில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண கோவிலுக்குள் 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்பறப்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ராட்சத கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது. பெரும் சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக தீபம் ஏற்றப்பட்டதால் திருவண்ணாமலையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பலர் கண்ணீர் வழிய வணங்கி வழிபட்டனர்.
திருவண்ணாமலை கோவில் முழுவதும் வண்ண வண்ண மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதனால் கோவில் கோபுரங்கள் மின்னொளியால் ஜொலிக்கின்றன. இதனைக் காண நேற்று இருந்தே திருவண்ணாமலையில் பக்தர்கள் வருகை தர ஆரம்பித்தனர்.
தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக 14,000 அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}