மார்கழி 11 திருவெம்பாவை பாசுரம் 11 .. மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்!

Dec 25, 2024,04:48 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


திருவெம்பாவை பாசுரம் 11 :


மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் 

கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி 

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற் 

செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல் 

மையார் தடங்கண் மடந்தை மணவாளா 

ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் 

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் 

உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.




பொருள் :


சிவ பெருமானே! உன்னுடைய உண்மையான அடியவர்களாகி நாங்கள், பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும் குளத்தில் குதித்து நீராடி, உன்னுடைய திருவடியை தேடும் பாடல்களை பாடிய படியே நீராடிக் கொண்டிருக்கிறோம். காலம் காலமாக இந்த பாவை நோன்பை நாங்கள் கடைபிடித்து வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பை போன்றவனே, உடல் முழுவதும் திருநீறு பூசியவனே! அனைத்து செல்வங்களுக்கும் தலைவனாக விளங்குபவனே! சிறுத்த இடையையும். மையிட்ட அழகிய மீன் போன்ற கண்களையும் உடைய பார்வதி தேவியின் கணவனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மைகளை அடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னை போற்றி பாடும் போதே எங்களுக்கு கிடைத்து விடுகிறது. இந்த பேரின்ப நிலை மறைந்து விடாமல் எப்போதும் நிலைத்திருக்க எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?

news

50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!

news

சுதந்திரம் காப்போம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்