- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 6 - திருவெம்பாவை பாசுரம் 6 .. மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை!
திருவெம்பாவை பாசுரம் 6 :
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள் :
மான் போன்ற இளம் பெண்ணே! நீ நேற்று, நாளை நான் வந்து உங்களை எழுப்புவேன் என்ற சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல், அது சென்ற திசை தெரியாம இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? வானுலகில் இருப்பவர்களும், நிலவு உலகம், இன்னும் பிற உலங்களில் இருப்பவர்கள் எவரும் அறிவதற்கு அரிதானவனாக இருக்கும் நம்முடைய தலைவனாகிய சிவ பெருமான், தானாகவே வலிய வந்து நமக்கு அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவரை நம்பி சரணடையும் பக்தர்களுக்காக தன்னுடைய நீண்ட திருவடிகளை காட்டி, இருக்கிறார்கள். அவரை பாடி, வழிபட்டு பழகிய எங்களுக்கு நீ உன் வாய் திறக்காமல் இருக்கின்றாய். சிவனை பற்றி இவ்வளவு நாங்கள் சொல்வதை கேட்டும் உன்னுடைய மனம் உருகவில்லையா? எங்களுக்க பதிலளிக்க உனக்கு மனமில்லையா? சிவனின் அருளுக்காக உருகும் எங்களுடன் வந்து சேர்ந்து நீயும் சிவனை பாடுவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026...இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா-லக்னோ அணிகள் மோதல்
Chettinadu Kitchen: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில்.. இது சைவமா ...அசைவமா??
தேவகோட்டையில் மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்.. 100% வாக்களிக்க மக்களுக்கு அழைப்பு!
பங்குனி தேய்பிறை அஷ்டமி.. ஈரோடு ராட்டைசுற்றி பாளையம் காலபைரவர் கோவிலில் விசேஷம்!
சிவப்பழகி.. அவளன்றி ஓரணுவும் அசையாது.. அவளன்றி யார் பசியும் ஓயாது!
Vrischikasana: வேதாவின் யோகா.. ரப்பர் மாதிரி வளையுறாங்களேய்யா.. முயன்றால் முடியாததே இல்லை
புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டசபை தேர்தல் 2026...காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு
மதிப்பு
{{comments.comment}}