- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 6 - திருவெம்பாவை பாசுரம் 6 .. மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை!
திருவெம்பாவை பாசுரம் 6 :
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்
பொருள் :
மான் போன்ற இளம் பெண்ணே! நீ நேற்று, நாளை நான் வந்து உங்களை எழுப்புவேன் என்ற சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல், அது சென்ற திசை தெரியாம இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? வானுலகில் இருப்பவர்களும், நிலவு உலகம், இன்னும் பிற உலங்களில் இருப்பவர்கள் எவரும் அறிவதற்கு அரிதானவனாக இருக்கும் நம்முடைய தலைவனாகிய சிவ பெருமான், தானாகவே வலிய வந்து நமக்கு அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவரை நம்பி சரணடையும் பக்தர்களுக்காக தன்னுடைய நீண்ட திருவடிகளை காட்டி, இருக்கிறார்கள். அவரை பாடி, வழிபட்டு பழகிய எங்களுக்கு நீ உன் வாய் திறக்காமல் இருக்கின்றாய். சிவனை பற்றி இவ்வளவு நாங்கள் சொல்வதை கேட்டும் உன்னுடைய மனம் உருகவில்லையா? எங்களுக்க பதிலளிக்க உனக்கு மனமில்லையா? சிவனின் அருளுக்காக உருகும் எங்களுடன் வந்து சேர்ந்து நீயும் சிவனை பாடுவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}