மார்கழி 6 - திருவெம்பாவை பாசுரம் 6 .. மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை!

Dec 20, 2024,05:03 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 6 -  திருவெம்பாவை பாசுரம் 6 .. மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை!



திருவெம்பாவை பாசுரம் 6 :


மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ

வானே நிலனே பிறவே அறிவரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்

வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்




பொருள் :


மான் போன்ற இளம் பெண்ணே! நீ நேற்று, நாளை நான் வந்து உங்களை எழுப்புவேன் என்ற சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல், அது சென்ற திசை தெரியாம இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? வானுலகில் இருப்பவர்களும், நிலவு உலகம், இன்னும் பிற உலங்களில் இருப்பவர்கள் எவரும் அறிவதற்கு அரிதானவனாக இருக்கும் நம்முடைய தலைவனாகிய சிவ பெருமான், தானாகவே வலிய வந்து நமக்கு அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அவரை நம்பி சரணடையும் பக்தர்களுக்காக தன்னுடைய நீண்ட திருவடிகளை காட்டி, இருக்கிறார்கள். அவரை பாடி, வழிபட்டு பழகிய எங்களுக்கு நீ உன் வாய் திறக்காமல் இருக்கின்றாய். சிவனை பற்றி இவ்வளவு நாங்கள் சொல்வதை கேட்டும் உன்னுடைய மனம் உருகவில்லையா? எங்களுக்க பதிலளிக்க உனக்கு மனமில்லையா? சிவனின் அருளுக்காக உருகும் எங்களுடன் வந்து சேர்ந்து நீயும் சிவனை பாடுவாயாக.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!

news

ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?

news

பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

news

கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்

news

திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!

news

இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்