- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 6 - திருவெம்பாவை பாசுரம் 6 .. மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை!
திருவெம்பாவை பாசுரம் 6 :
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

பொருள் :
மான் போன்ற இளம் பெண்ணே! நீ நேற்று, நாளை நான் வந்து உங்களை எழுப்புவேன் என்ற சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமல், அது சென்ற திசை தெரியாம இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? வானுலகில் இருப்பவர்களும், நிலவு உலகம், இன்னும் பிற உலங்களில் இருப்பவர்கள் எவரும் அறிவதற்கு அரிதானவனாக இருக்கும் நம்முடைய தலைவனாகிய சிவ பெருமான், தானாகவே வலிய வந்து நமக்கு அருள் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவரை நம்பி சரணடையும் பக்தர்களுக்காக தன்னுடைய நீண்ட திருவடிகளை காட்டி, இருக்கிறார்கள். அவரை பாடி, வழிபட்டு பழகிய எங்களுக்கு நீ உன் வாய் திறக்காமல் இருக்கின்றாய். சிவனை பற்றி இவ்வளவு நாங்கள் சொல்வதை கேட்டும் உன்னுடைய மனம் உருகவில்லையா? எங்களுக்க பதிலளிக்க உனக்கு மனமில்லையா? சிவனின் அருளுக்காக உருகும் எங்களுடன் வந்து சேர்ந்து நீயும் சிவனை பாடுவாயாக.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிமுக கூட்டணியில் அமமுக.,விற்கு 6 சீட்டா?...உண்மையை உடைத்த டிடிவி தினகரன்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
அதி நவீன வசதிகளுடன் 20 வால்வோ பேருந்துகள்.. சொகுசாக இனி போகலாம்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து.. புளூ பேர்ட் செயற்கைக்கோளுடன்.. விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3-எம்.6
ஆரவல்லி மலைத் தொடர்.. இமயமலைக்கே சீனியர்.. கணிமத் திருடர்களிடம் சிக்கி சிதையும் அவலம்!
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
{{comments.comment}}