மார்கழி 9 திருவெம்பாவை பாசுரம் 9.. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

Dec 23, 2024,05:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 9 திருவெம்பாவை பாசுரம் 9.. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே


திருவெம்பாவை பாசுரம் 9:


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.




பொருள் : 


பல கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றிய பழமையான விஷயங்கள் பலவற்றிற்கும் முன்பு தோன்றி பழமைக்கும் பழமையானவன் பரம்பொருளாகிய சிவ பெருமான். அவன் பழமையானவர் மட்டும் கிடையாது. புதுமைக்கு புதுமையாகவும் விளங்கும் சிவ பெருமானே உன்னை தலைவனாக கொண்ட நாங்கள், உன்னுடைய அடியார்களை மட்டுமே பணிந்து வணங்கிடுவோம். அவர்களுக்கே பணி செய்திடுவோம். உன் மீது பக்தி கொண்டர் மட்டுமே எங்களுக்கு கணவராக வர வேண்டும். அவர்கள் கூறும் வார்த்தைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாக கருதி பணி செய்வோம். எங்களின் இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டு நிறைவேற்றினால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையை அடைவோம். இதை தவிர வேறு பரிசுகள் எதுவும் எங்களுக்கு வேண்டாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்