- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 9 திருவெம்பாவை பாசுரம் 9.. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
திருவெம்பாவை பாசுரம் 9:
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

பொருள் :
பல கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றிய பழமையான விஷயங்கள் பலவற்றிற்கும் முன்பு தோன்றி பழமைக்கும் பழமையானவன் பரம்பொருளாகிய சிவ பெருமான். அவன் பழமையானவர் மட்டும் கிடையாது. புதுமைக்கு புதுமையாகவும் விளங்கும் சிவ பெருமானே உன்னை தலைவனாக கொண்ட நாங்கள், உன்னுடைய அடியார்களை மட்டுமே பணிந்து வணங்கிடுவோம். அவர்களுக்கே பணி செய்திடுவோம். உன் மீது பக்தி கொண்டர் மட்டுமே எங்களுக்கு கணவராக வர வேண்டும். அவர்கள் கூறும் வார்த்தைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாக கருதி பணி செய்வோம். எங்களின் இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டு நிறைவேற்றினால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையை அடைவோம். இதை தவிர வேறு பரிசுகள் எதுவும் எங்களுக்கு வேண்டாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்
பிரேமலதா விஜயகாந்த் கேட்டிருந்தால், விஜய் துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பாரா??
புதிய கட்சி துவங்குகிறாரா அண்ணாமலை?.. பாஜக தலைவரை சந்திக்க டெல்லி விரைந்தார்
ADMK to TVK: அதிமுக வினர் தவெகவில் இணைவது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
ஏக இறைவனுக்கும்.. அம்மை அப்பனுக்கும் நன்றி செலுத்தி.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 12)
உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து!
வெப்ப அலை : சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்!
ஜூன் வந்தாச்சு.. பள்ளிகள் திறக்கப் போகுது.. வேற என்னெல்லாம் இந்த மாசத்தில் இருக்கு?
Monday Thoughts: "தி.மு... தி..பி".. புதிய உறவால் உதயமாகும் பெயர் மாற்றங்கள்!
{{comments.comment}}