மார்கழி 9 திருவெம்பாவை பாசுரம் 9.. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

Dec 23, 2024,05:16 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மார்கழி 9 திருவெம்பாவை பாசுரம் 9.. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே


திருவெம்பாவை பாசுரம் 9:


முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.




பொருள் : 


பல கோடி வருடங்களுக்கு முன்பு தோன்றிய பழமையான விஷயங்கள் பலவற்றிற்கும் முன்பு தோன்றி பழமைக்கும் பழமையானவன் பரம்பொருளாகிய சிவ பெருமான். அவன் பழமையானவர் மட்டும் கிடையாது. புதுமைக்கு புதுமையாகவும் விளங்கும் சிவ பெருமானே உன்னை தலைவனாக கொண்ட நாங்கள், உன்னுடைய அடியார்களை மட்டுமே பணிந்து வணங்கிடுவோம். அவர்களுக்கே பணி செய்திடுவோம். உன் மீது பக்தி கொண்டர் மட்டுமே எங்களுக்கு கணவராக வர வேண்டும். அவர்கள் கூறும் வார்த்தைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாக கருதி பணி செய்வோம். எங்களின் இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டு நிறைவேற்றினால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையை அடைவோம். இதை தவிர வேறு பரிசுகள் எதுவும் எங்களுக்கு வேண்டாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்