நிசமான பொங்கல்!

Jan 15, 2026,02:01 PM IST
- வே. ஜெயந்தி

கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை தரும்

உறவும் நட்பும்
ஒரே வாசலில் சங்கமம்

வண்ணக் கோலங்களில்
வாழ்வு புன்னகை பூக்கும்

மாவிலை தோரணம்
மகிழ்ச்சியை அழைக்கும்

பெரிய பானையில்
பச்சரிசி பொங்க

நெய் மணத்தில்
நன்றி மனம் மலரும்



அன்னம் அளிக்கும்
உழவனின் வியர்வைக்கு

மௌன மரியாதை
செலுத்தும் நாள் இதுவே

எல்லை மறந்து
உள்ளம் ஒன்றி

“என்” என்ற சொல் கரைந்து
“நாம்” ஆகும் தருணம்

பானை பொங்கும் போது
மனமும் பொங்க வேண்டும்

பசியுள்ளவர்க்கு
பகிர்ந்தாலே திருநாள்

சூரியன் பகவானுக்கு
படைப்பது ஒரு சடங்கு அல்ல

ஒற்றுமை, உழைப்பு,
பகிர்வின் பேருண்மை

அன்பு அறம்
உள்ளங்களில் பொங்க

நாளும் நிலைக்கும்
அதுவே நிசமான பொங்கல்

(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்