நிசமான பொங்கல்!

Jan 15, 2026,02:01 PM IST
- வே. ஜெயந்தி

கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை தரும்

உறவும் நட்பும்
ஒரே வாசலில் சங்கமம்

வண்ணக் கோலங்களில்
வாழ்வு புன்னகை பூக்கும்

மாவிலை தோரணம்
மகிழ்ச்சியை அழைக்கும்

பெரிய பானையில்
பச்சரிசி பொங்க

நெய் மணத்தில்
நன்றி மனம் மலரும்



அன்னம் அளிக்கும்
உழவனின் வியர்வைக்கு

மௌன மரியாதை
செலுத்தும் நாள் இதுவே

எல்லை மறந்து
உள்ளம் ஒன்றி

“என்” என்ற சொல் கரைந்து
“நாம்” ஆகும் தருணம்

பானை பொங்கும் போது
மனமும் பொங்க வேண்டும்

பசியுள்ளவர்க்கு
பகிர்ந்தாலே திருநாள்

சூரியன் பகவானுக்கு
படைப்பது ஒரு சடங்கு அல்ல

ஒற்றுமை, உழைப்பு,
பகிர்வின் பேருண்மை

அன்பு அறம்
உள்ளங்களில் பொங்க

நாளும் நிலைக்கும்
அதுவே நிசமான பொங்கல்

(வே.ஜெயந்தி, பட்டதாரி ஆசிரியர், செங்கல்பட்டு மாவட்டம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்