புது டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் (ஜூலை 1) அமலுக்கு வந்துள்ளன.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஐபிசி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவை நேற்று நள்ளிரவு வரை அமலில் இருந்து வந்தன. இந்த சட்டங்களுக்கு விடை கொடுத்து விட்ட புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்குப் பதிலாக இந்திய தண்டனைச் சட்டம் மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டமும், இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய சாக்ஷிய சட்டமும், இந்திய குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சட்டத்தையும் உருவாக்கியது மத்திய அரசு. இந்த சட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்த மூன்று சட்டங்களும் கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் மசோத்தாக்களாக தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பப்பட்டன. அவரும் உடனடியாக ஒப்புதல் அளிக்கவே இது சட்டமானது.
இந்த சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வாயில் நுழையாத பெயர்களை சூட்டி சட்டங்களை அமல்படுத்துவதாக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வந்தனர். ஆனாலும் தற்போது இந்த சட்டங்கள் அமலுக்கு வந்து விட்டன.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}