மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்.. இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன!

Jul 01, 2024,12:52 PM IST

புது டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் (ஜூலை 1)  அமலுக்கு வந்துள்ளன.


ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஐபிசி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவை நேற்று நள்ளிரவு வரை அமலில் இருந்து வந்தன. இந்த சட்டங்களுக்கு விடை கொடுத்து விட்ட புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.




இதற்குப் பதிலாக இந்திய தண்டனைச் சட்டம் மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டமும், இந்திய சாட்சிகள் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய சாக்ஷிய சட்டமும், இந்திய குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சட்டத்தையும் உருவாக்கியது மத்திய அரசு. இந்த சட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.


இந்த மூன்று சட்டங்களும் கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் மசோத்தாக்களாக தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் இவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பப்பட்டன. அவரும் உடனடியாக ஒப்புதல் அளிக்கவே இது சட்டமானது.


இந்த சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வாயில் நுழையாத பெயர்களை சூட்டி சட்டங்களை அமல்படுத்துவதாக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த புதிய சட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் நாடு முழுவதும் போராட்டமும் நடத்தி வந்தனர். ஆனாலும் தற்போது இந்த சட்டங்கள் அமலுக்கு வந்து விட்டன.

சமீபத்திய செய்திகள்

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்