Tirunvannamalai Deepam 2024.. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு தடை!

Dec 11, 2024,07:08 PM IST

சென்னை : திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாள் அன்று மலையேறி சென்று மகாதீபத்தை தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 04ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று (டிசம்பர் 10) நடைபெற்றது. விழாவின் உச்ச நிகழ்வான திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் வரை எரியும். சுற்றியுள்ள 20 கி.மீ., தூரத்திற்கு இந்த தீபத்தை மக்கள் தரிசனம் செய்ய முடியும்.




திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் திருவண்ணாமலையில் நடைபெற்று வந்தது. பரணி தீபத்தை காண 7500 பேருக்கும், மகா தீபத்தை தரிசிக்க மலையேறி செல்ல 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக நவம்பர் மாதம் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், டிசம்பர் 01ம் தேதியன்று திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் அண்ணாமலையார் மலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இதைத் தொடர்ந்து மலையில் பல இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த முறை மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.


இது தொடர்பாக நேற்று சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கண்டிப்பாக திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்றார். இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் தன்று மலை மீது தீபம் ஏற்றப்படும். ஆனால் பக்தர்கள் மலை மீது செல்ல அனுமதி கிடையாது. ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதிகமானவர்களை மலையில் ஏற்றுவது சரி அல்ல என அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது. 


இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கோவில் வளாகத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை காண 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கோவில் நிர்வாகிகள் மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கான திரி அடங்கிய கொப்பரை, நெய் ஆகியவை  மலை உச்சிக்கு எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் 35 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்