கண்டக்டர் கிட்ட இனி சில்லறைக்கு சண்டை வராது பாஸ்.. கூகுள் பே, போன் பே மூலம் டிக்கெட் வாங்கலாம்!

Jan 29, 2024,06:06 PM IST
சென்னை: யுபிஐ முறையில் சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் சோதனை முறையில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்து பயணம் என்றாலே பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும் பெரிய தலைவலியை கொடுக்கும் பிரச்சனை என்னவென்றால், சில்லறை பிரச்சனை. 50 பைசா இல்லை.. இறங்குறப்ப வாங்கிக்கங்க" என்று சொல்வார்கள்.. பலர் கொடுப்பார்கள்.. சிலர் மறப்பார்கள்.. இதனால் சண்டை வரும்.. இது வாடிக்கையானது. 

சில்லறை பிரச்சனையை சாதாரணமாக கூறிவிட முடியாது. சில்லறை இல்லை என்பதற்காக பேருந்தில் பயணம் செய்யும் பயணியை நடுரோட்டில் நடத்துனர் இறக்கி விடுவதும், நடந்துனர் சில்லறை தரவில்லை என்பதற்காக பயணிகள் கடுப்பாகி சண்டை போடுவதும் நிறைவே நிகழ்ந்துள்ளன. இது மட்டுமின்றி பேருந்து பயணமும் தடைபட்டு கைகலப்பு சம்பவங்கள் நடப்பதும், போலீஸில் புகார் கொடுக்கும் அளவிற்கு போன பிரச்சனைகளும் உண்டு. 



இந்த சில்லறைச் சண்டையை வைத்து வடிவேலுவே பல படங்களில் காமெடி செய்துள்ளார். இப்படி பேருந்து பயணத்தின் போது சில்லறையினால் நடந்த பிரச்சனைகளை கூறிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அதிக பிரச்சனைகள் நடந்துள்ளன.

தற்போது இதில் இருந்து எளிதில் சில்லறை பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக பயணம் செய்வதற்கு ஒரு வழி கிடைத்துள்ளது. அது என்னன்னு  கேட்கீறீங்களா? .. வேறென்ன யுபிஐதான்..! யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் வழியை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம். நாகரீக வளர்ச்சி ஒரு புறம் பாதிப்பு என்றாலும், மற்றறொரு புறம் சூப்பர் என்றும் சொல்லலாம். 

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த  தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், முதல் கட்டமாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் நடத்துனர்களுக்கு யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் பயணச்சீட்டு வழங்கும் வகையிலான புதிய கையடக்க கருவிகளை மாநகரப் போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.

தொடு திரை வசதி கொண்ட இந்த கருவியில் பயணிகள் ஏறும் இடம் மற்றும் இறங்குமிடத்தையும் தேர்வு செய்து அதற்கான கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. இக்கருவி மூலம் கார்டு மற்றும் யுபிஐ, க்யூஆர் குறியீடு பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சோதனை முறையில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தி உள்ள நிலையில், அதன் வெற்றி பயன்பாடு நிறை குறைகளை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள மற்ற பணிமனைகளுக்கும் இக்கருவிகள் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிறகென்னப்பா.. இனி கையில் காசே இல்லாமல்.. ஏன் பர்ஸ் கூட இல்லாமல் கார்டை மட்டும் வைத்துக் கொண்டு ஜாலியா போலாமே!

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்