- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
பிப்ரவரி 14 என்றால் நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். அந்த நாளை விட முக்கியமாக நாம் அனைவரும் நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டிய நாள்.
அப்படி என்ன நாள்?

புல்வாமா நினைவு தினம் தான்.
இப்பொழுது உங்கள் நினைவிற்கு வருகிறதா? அந்த நாளின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம் .
இந்தியாவில் மிகுந்த வேதனையை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாகப் புல்வாமா தாக்குதல் கருதப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, ஜம்மு & காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2019 பிப்ரவரி 14 அன்று, ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த பேருந்து அணிவகுப்பை ஒரு தற்கொலைப் பயங்கரவாதி குண்டு நிரப்பப்பட்ட வாகனத்தால் மோதினார்கள். இந்த தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். இந்த நிகழ்வு ஜம்மு-காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாக கருதப்பட்டது.
புல்வாமா தாக்குதல் இந்திய அரசியலிலும், பாதுகாப்பு சூழலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்திய விமானப்படை பாலகோட் விமான தாக்குதல், என்ற நடவடிக்கையை மேற்கொண்டு, தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் இந்தியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது என்பதை உலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு நாடு முழுவதும் துக்க அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நம் நாட்டிற்காக உயிர் துறந்த வீரர்களின் தியாகத்தையும், அவர்களின் குடும்பங்கள் அடையும் துயரத்தையும், நம் நாட்டைக் காப்பாற்ற நினைக்கும் வீரர்களையும் இன்றைய நாளில் நாம் அவசியம் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும்
இன்றைய தினம் காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், இந்தியர்களுக்கு அது ஒரு துயர நாளாக மாறியதை நாம் மறக்கக்கூடாது.
நாட்டை பாதுகாக்க பணியாற்றிய வீரர்கள் பலர் உயிரிழந்ததால், பிப்ரவரி 14 இப்போது “புல்வாமா நினைவு தினம்” என சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.
இந்திய மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் புல்வாமா நினைவு தினத்தில், பெற்றோர்கள் தனது குழந்தைகளிடமும்,ஆசிரியர்கள் மாணவரிடமும் கட்டாயம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் வீரர்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய நாளை நாம் துக்க நாளாக கொண்டாடாமல் இளைஞர்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்கும் நாளாக கொண்டாடுவோம். தாய் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு இன்றைய நாளில் வீரவணக்கம் செலுத்துவோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார்.
ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார்.)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}