- செல்லலட்சுமி
இன்று... சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!
இப்ப எல்லாமே மாறிப் போயிருச்சு.. எனக்கு மகள் வேண்டுமென்று கடவுளிடம் கேட்காத பெற்றோர்களே இல்லை. அப்படி விரும்பிப் பெற்று மகிழ்ந்து அந்த மகளை போற்ற ஆரம்பித்து விட்டது உலகம்.

பெற்ற மகளை "மகாராணி", "மகாலெட்சுமி", "Princess", "Angel","குலசாமி"ன்னு கொண்டாடி வருகிறார்கள் பெற்றோர்கள். தந்தையானவனோ ஒரு படி மேலே போய் என்னை பெற்ற தாய் என்கிறான் தன் மகளை.
மகள் வந்த பிறகு தாய், தாரமெல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள். மகள் அன்பே போதும், மகள் அதிகாரமே வாழ்கை என்று அந்த அன்புக்கு அடிமை ஆகிப் போய் விடுகிறான் தந்தை. இன்று "Dad's little princess" என்று அப்பா மகள் உறவு பலம் பெற்றுள்ளது.
தன் அன்பான மகளை பாடம் படிக்க பள்ளிக்கு அணுப்பும் பிரிவை கூட தாங்க முடியாமல் மனம் இல்லாமல் அனுப்புகிறான் பெற்றவன். தாரை வாத்து கொடுக்கும் போது உயிரே தன்னை விட்டுப் போவது போல உணர்கிறான் தந்தை.
அன்று மகளை கரை சேர்க்க பணம் வேண்டுமென்று பயந்தவன், இன்று மகளை கரை சேர்க்கும் வரை பாதுகாப்பு வேண்டுமென்று பயப்படுகிறான். நல்லபடியாக கரை சேர்த்தும் கூட, தன் மகள் தன் வீட்டில் இருந்தது போல ராணி மாதிரி இருக்கிறாளா என்று அலைமோதுகிறான் தங்தையானவன்... தான் "ராணி"யாக போற்றிய மகளுக்கே மகள் பிறக்கும்போது அந்த குட்டி இளவரசி பின்னால் போய் விடுகிறான்.. அந்த சுவாரஸ்யமும் நடக்கத்தான் செய்யுது.!
பெண் என்பவளை பூ மாதிரி, சாமி மாதிரி, ராணி மாதிரி என்றெல்லாம் சொல்லி கண்ணுக்குள் வைத்து வளர்ப்பது ஒருபக்கம் இருந்தாலும், அவளுக்குள் தைரியத்தையும் ஊட்டி வளர்க்க நாம் தவறக் கூடாது.. கண்ணும் கருத்துமாய் வளர்க்கும் அதே வேளையில், தைரியம், நம்பிக்கை, கல்வி, சமூக அக்கறை, பொறுப்பு, கடமை என எல்லாவற்றையும் அணிகலன்களாக அணிவித்து வளர்க்கும்போது அந்தப் பெண் ஒரு சமூகத்தையே தாங்கிப் பிடிக்கும் திறத்துடன் வளர்கிறாள்.
பெற்றோரும் சமூகமும் பெண் பிள்ளைகளை தைரியமாகவும் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வளர்போம்.. பெண்மையை போற்றுவோம்... பெண்களைப் போற்றுவதோடு, பெண்களை மதிக்க வேண்டும் என்பதை கூடவே வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்ப்போம்.
அதிமுக 169 இடங்களில் போட்டி...கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 65 தொகுதிகள் விபரம்
தளி முதல் ராசிபுரம் தனி வரை.. பாஜக போட்டியிடப் போகும் தொகுதிகள் இவைதான்.. Full list
பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா
நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?.. (மனிதம் மலர்கையில் - 7)
UPI PIN மறந்து போச்சா? கவலை வேண்டாம்...ஈஸியா பணம் அனுப்ப வழி இருக்கு
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி...கேன்சல் டிக்கெட்டிற்கு இனி ரீஃபண்ட் கிடையாதாம்
ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியில்லை...வேல்முருகன் அதிரடி அறிவிப்பு
ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!
{{comments.comment}}