- எம் கே திருப்பதி, திருப்பூர்
பெண்மை தெய்வமாக்கி
தொன்மை பேசும் உலகில்
ஆடவன் அறத்தன்மை
நாடவும் ஆளில்லை
இல்லத்து தர்மம்
வல்லி இயற்றலாம்
குடியின் சுமையை
மடியில் தாங்குவரா?
இருபத்தைந்து அகவையில்
பருந்தாய் பறக்கும்
பணம் தேடி மனம்....
எழுபதை எட்டியும்
விழுவதில்லை வேட்கை

வீதி வீதியாய்
விரட்டும் வாழ்க்கை
விழுந்துவிட்டால்
பிரிவிட்ட கயிறாய்
நெறி கெட்டுப் போகும்
காவலன் இல்லா
மணிமுடி!
இரை தேடி
இல் கொள்ளும்
குறை இல்லா குடும்பனுக்கு
வக்கனையாய் நாலு வகை
தக்கணமே தாளித்து வை
தன் நலம் பேணா
தகவனுக்கு
முன்பின் முரண்படாமல்
அன்பின் ஈரம் பிசைந்து
கண்ணில் காதல் காட்டு
அவனுக்கு
பிள்ளையே உலகம்
இல்லமே மனைவி!
அவன்
சல்லையே இல்லாமல்
வெள்ளையாய் வாழட்டும்!
(இன்று ஆண்கள் தினம்)
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தை குறி வைத்து ஏவுகணைத் தாக்குதல்.. ஈரான் அறிவிப்பு
பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்
இஸ்ரேலின் சரமாரி குண்டு வீச்சுக்கு இலக்கான ஈரானின் காந்தி மருத்துவமனை..!
மார்ச் மாதம் வந்தாச்சு.. என்னென்ன ஸ்பெஷல்ஸ் இருக்கு பாருங்க!
இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!
நான் கவிஞர் லா. பெனிஸ் பேசுகிறேன்!
இப்படித்தான் வேலை செய்யுது ஏஐ.. How AI works
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – ஒரு புதுமைப் பெண்ணின் வெற்றிச் சாட்சியம்
நாளைய உலகும் இன்றைய நம் கடமையும்!
{{comments.comment}}