- எம் கே திருப்பதி, திருப்பூர்
பெண்மை தெய்வமாக்கி
தொன்மை பேசும் உலகில்
ஆடவன் அறத்தன்மை
நாடவும் ஆளில்லை
இல்லத்து தர்மம்
வல்லி இயற்றலாம்
குடியின் சுமையை
மடியில் தாங்குவரா?
இருபத்தைந்து அகவையில்
பருந்தாய் பறக்கும்
பணம் தேடி மனம்....
எழுபதை எட்டியும்
விழுவதில்லை வேட்கை

வீதி வீதியாய்
விரட்டும் வாழ்க்கை
விழுந்துவிட்டால்
பிரிவிட்ட கயிறாய்
நெறி கெட்டுப் போகும்
காவலன் இல்லா
மணிமுடி!
இரை தேடி
இல் கொள்ளும்
குறை இல்லா குடும்பனுக்கு
வக்கனையாய் நாலு வகை
தக்கணமே தாளித்து வை
தன் நலம் பேணா
தகவனுக்கு
முன்பின் முரண்படாமல்
அன்பின் ஈரம் பிசைந்து
கண்ணில் காதல் காட்டு
அவனுக்கு
பிள்ளையே உலகம்
இல்லமே மனைவி!
அவன்
சல்லையே இல்லாமல்
வெள்ளையாய் வாழட்டும்!
(இன்று ஆண்கள் தினம்)
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
முதியோர் இல்லம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
அனைத்து பரிமானங்களிலும் ஆண்களே ஆதாரமாய்...!
எதையும் தாங்கி நிற்கும்.. ஒரு மௌன மலை…!
அரச மர நிழலை நம்பி.. நான்கு பறவைகள்!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
இருபத்தைந்து அகவையில்.. பருந்தாய் பறக்கும்.. பணம் தேடி மனம்.. ஆண்கள் தினம்
கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!
{{comments.comment}}