டெல்லி: கார்கில் போரின் 24வது வருட தினத்தை நாடு இன்று கொண்டாடி வருகிறது.. நிச்சயம் இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்.
இந்தியாவின் பலம் முன்பை விட பல மடங்கு அதிகரித்திருப்பதையும், இந்தியாவின் வேகம் விஸ்வரூபம் எடுத்திருப்பதையும் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே காட்டிய போர்தான் கார்கில் மோதல்.
இந்தியாவின் பிரதமராக அப்போது வாஜ்பாய் இருந்தார். பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். கார்கில் பகுதியில் ஊடுறுவிய பாகிஸ்தான் வீரர்களை விரட்டியடிக்க இந்தியத் தரப்பு பதிலடியில் இறங்கவே அது போராக மாறியது. கார்கில் போரில் பல இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்தனர். ஆனால் அவர்கள் செய்த தியாகம் வீண் போகவில்லை. அதன் பிறகு நம்மிடம் நேரடியாக வாலாட்டுவதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை பாகிஸ்தான்.
கார்கில் போரில் இந்தியாவே வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர்களின் ஆக்கிரமிப்பையும், ஊடுறுவலையும் விரட்டியடித்தது. இந்திய விமானப்படையின் தீரச் செயல் இதில் முக்கியமானது. 1999ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி தொடங்கிய யுத்தம், ஜூலை 26ம் தேதி முடிவடைந்தது. இந்தியாவின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்தது. ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்த போரை நடத்தியது இந்தியா. இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தானியப் படைகள் நிலை குலைந்தன. சமாளிக்க முடியாமல் திணறின. இந்தியாவின் தாக்குதல் வீரியம் மிக்கதாக இருந்ததால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஆக்கிரமித்த, ஊடுறுவிய பகுதிகளை விட்டு தலை தெறிக்க ஓடின பாகிஸ்தானிய படைகள்.
கார்கில் போருக்கு மிக முக்கியக் காரணமே பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி தான். அவர் வேறு யாருமல்ல ஜெனரல் பர்வேஸ் முஷாரப்தான். அவரது அதிகார பசிதான் அந்தப் போருக்குக் காரணம். இந்தப் போருக்குப் பிறகுதான் அவரது தலைமையில் ராணுவப் புரட்சி நடந்து நவாஸ் ஷெரீப் ஆட்சி கலைக்கப்பட்டு, சர்வாதிகாரியானார் முஷாரப் என்பது நினைவிருக்கலாம். தனது சுய லாபத்திற்காக இரு நாடுகளை மோத விட்டு வேடிக்கை பார்த்த முஷாரப், அதிரபான பிறகும் கூட இந்தியாவுக்கு எதிராக எந்த வெற்றியையும், சாதனையையும் படைக்க முடியவில்லை என்பது வரலாறாகும்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}