டெல்லி: கார்கில் போரின் 24வது வருட தினத்தை நாடு இன்று கொண்டாடி வருகிறது.. நிச்சயம் இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்றுதான்.
இந்தியாவின் பலம் முன்பை விட பல மடங்கு அதிகரித்திருப்பதையும், இந்தியாவின் வேகம் விஸ்வரூபம் எடுத்திருப்பதையும் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே காட்டிய போர்தான் கார்கில் மோதல்.
இந்தியாவின் பிரதமராக அப்போது வாஜ்பாய் இருந்தார். பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தார். கார்கில் பகுதியில் ஊடுறுவிய பாகிஸ்தான் வீரர்களை விரட்டியடிக்க இந்தியத் தரப்பு பதிலடியில் இறங்கவே அது போராக மாறியது. கார்கில் போரில் பல இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை இழந்தனர். ஆனால் அவர்கள் செய்த தியாகம் வீண் போகவில்லை. அதன் பிறகு நம்மிடம் நேரடியாக வாலாட்டுவதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை பாகிஸ்தான்.
கார்கில் போரில் இந்தியாவே வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர்களின் ஆக்கிரமிப்பையும், ஊடுறுவலையும் விரட்டியடித்தது. இந்திய விமானப்படையின் தீரச் செயல் இதில் முக்கியமானது. 1999ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி தொடங்கிய யுத்தம், ஜூலை 26ம் தேதி முடிவடைந்தது. இந்தியாவின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்தது. ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்த போரை நடத்தியது இந்தியா. இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து நடத்திய அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தானியப் படைகள் நிலை குலைந்தன. சமாளிக்க முடியாமல் திணறின. இந்தியாவின் தாக்குதல் வீரியம் மிக்கதாக இருந்ததால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஆக்கிரமித்த, ஊடுறுவிய பகுதிகளை விட்டு தலை தெறிக்க ஓடின பாகிஸ்தானிய படைகள்.
கார்கில் போருக்கு மிக முக்கியக் காரணமே பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி தான். அவர் வேறு யாருமல்ல ஜெனரல் பர்வேஸ் முஷாரப்தான். அவரது அதிகார பசிதான் அந்தப் போருக்குக் காரணம். இந்தப் போருக்குப் பிறகுதான் அவரது தலைமையில் ராணுவப் புரட்சி நடந்து நவாஸ் ஷெரீப் ஆட்சி கலைக்கப்பட்டு, சர்வாதிகாரியானார் முஷாரப் என்பது நினைவிருக்கலாம். தனது சுய லாபத்திற்காக இரு நாடுகளை மோத விட்டு வேடிக்கை பார்த்த முஷாரப், அதிரபான பிறகும் கூட இந்தியாவுக்கு எதிராக எந்த வெற்றியையும், சாதனையையும் படைக்க முடியவில்லை என்பது வரலாறாகும்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}