சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றங்களை சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் சோதனை ரீதியாக இது அமல்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள், துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.
காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில், திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய "யு" டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்).
இதேபோல கார்ப்பரேஷன் சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய "யு" திருப்பத்தில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
நல்ல பாட்டு கேட்டா.. ஆஹா.. அடடா.. Good songs are good healers!
A Silk Wrapped in Love
S Sharmila Poem: உனக்குள் ஒருவன்!
நதியும் நீயும் ஒன்றோ!
{{comments.comment}}