திருச்சி கோர்ட்டில் சீமான்.. 6 ஆடியோ ஆதாரங்களை ஒப்படைக்க டிஐஜி வருண் குமாருக்கு உத்தரவு!

Apr 08, 2025,04:40 PM IST

திருச்சி: அவதூறு வழக்கில் 6 ஆவணங்களை சீமானிடம் ஒப்படைக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன்மீதும் தன்னுடைய குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்தார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  சீமான் ஆஜராகவில்லை. டிஐஜி வருண்குமார் மட்டும் ஆஜரானார். 


அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதால், அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. நாளை சீமான் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீமானை இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இல்லை என்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். 




அதன்படி, இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயா முன்பு  சீமான் ஆஜரானார். அப்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு டிஐஜி வருண்குமார் சமர்ப்பித்த ஆடியோ ஆதாரங்களை தங்களுக்கு தர வேண்டும் என்று சீமான் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.


அதற்கு நீதிபதி, அரை மணி நேரத்திற்குள் சீமான் தரப்பிடம் 6 ஆதாரங்களை  ஒப்படைக்க வேண்டும். ஆதாரங்களை பெற்ற பிறகு சீமான் கையெழுத்திட்டு விட்டு செல்லவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையையும் ஒத்திவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்