Sripriya Short Story: வாய்மையே வெல்லும்!

Apr 16, 2026,05:17 PM IST

- பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு


குமரேசன் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தான். அப்பா இல்லை. அம்மா வயல் வேலைக்குப் போய் அவனைப் படிக்க வைத்தாள். குமரேசனிடம் ஒரே ஒரு சொத்து உண்டு—எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டான்.


ஒருநாள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடும்போது பந்து பறந்து, தலைமை ஆசிரியர் அறைக் கண்ணாடியை உடைத்தது. அடித்தது யார் எனத் தெரியவில்லை. தலைமை ஆசிரியர் கோபத்தில், “உண்மையைச் சொல்லாவிட்டால் வகுப்பு முழுவதும் தண்டனை” என்றார்.


பந்தை அடித்தது ஊர்ப் பெரியவரின் பேரன் மதி. “நீ ஒன்னும் சொல்லாதே. நான் பெரிய இடத்துப் பையன். என் தாத்தா பார்த்துக்குவார். நீ ஏழை, உன்னைத்தான் மாட்டிவிடுவாங்க” என்று மதி குமரேசனை மிரட்டினான்.


மறுநாள் விசாரணை. எல்லோரும் மௌனம். தலைமை ஆசிரியர் குமரேசனைப் பார்த்தார். “உனக்குத் தெரியுமா?” 


குமரேசனுக்கு அம்மாவின் முகம் நினைவுக்கு வந்தது. “பொய் சொல்லி வாழ்ற வாழ்க்கை வாழ்க்கையே இல்லைடா” என்பாள். 


நடுங்கும் குரலில் நிமிர்ந்தான். “ஐயா, பந்தை அடிச்சது மதிதான். நான் பார்த்தேன்.”




அவ்வளவுதான். மதி எழுந்து, “இவன் பொய் சொல்றான் சார். இவன்தான் அடிச்சான்” என்று கத்தினான். ஊர்ப் பெரியவரும் பள்ளிக்கு வந்து, “என் பேரன் அப்படிச் செய்ய மாட்டான். இந்த ஏழைப் பையன்தான் காரணம்” என்றார்.


தலைமை ஆசிரியர் இரண்டு பேரையும் தனியே அழைத்தார். “கண்ணாடி உடையறதுக்கு முன்னாடி என்ன பேசிக்கிட்டீங்க?” என்றார். 


மதி தடுமாறினான். குமரேசன் தெளிவாகச் சொன்னான்: “மதி ‘சிக்ஸர் அடிக்கிறேன் பாரு’ன்னு சொல்லி ஓங்கி அடிச்சான் சார். பந்து நேரா ஜன்னலுக்குப் போச்சு. நான் ‘வேணாம்டா’னு சொன்னேன்.”


உண்மையின் தெளிவு, பொய்யின் தடுமாற்றம். தலைமை ஆசிரியருக்குப் புரிந்தது. மதியின் தாத்தாவுக்கும் உண்மை உரைத்தது. தலை குனிந்தார். 


“தப்பு செஞ்சது என் பேரன்தான். மன்னிச்சுக்குங்க. கண்ணாடி செலவை நான் ஏத்துக்குறேன்” என்றார். மதியிடம் திரும்பி, “பொய் சொல்லி தப்பிக்கலாம்னு நினைச்சியா? இன்னைக்கு ஒரு ஏழைப் பையனோட வாய்மை உன்னைத் தோற்கடிச்சிருச்சு பார்த்தியா?”


அன்று பள்ளி விட்டு வரும்போது குமரேசனின் கையில் மதி ஒரு புது நோட்டுப் புத்தகம் கொடுத்தான். “தப்பு பண்ணிட்டேன். இனிமே உண்மைதான் பேசுவேன்” என்றான்.


அம்மா கேட்டாள், “ஏன்டா கண்ணு கலங்குது?”  

“இல்லம்மா, வாய்மை ஜெயிச்சதுனால சந்தோஷம்.”


பொய் ஒருநாள் வெல்லலாம், ஆனால் வாய்மை என்றும் வெல்லும். உண்மை பேசத் துணிவு வேண்டும். அந்தத் துணிவே நம்மை உயர்த்தும்.


(பன்முகத் திறமையாளர் ச. ஸ்ரீபிரியா பழனிவேலு, உதவித் தலைமையாசிரியர், பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி , பட்டுக்கோட்டை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்