திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்குவதான அறைகள் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தாலும், சாமானிய பக்தர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திருவிழா நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் சாமானிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வது, அவர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்யவதற்கு என திருப்பதி தேவஸ்தானம் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. உற்சவ காலங்களில் சாமானி மக்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பல முக்கிய சேவைகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 04ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தின் 3வது மற்றும் 4வது வாரங்களில் இந்த பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் செய்வார். இது குறித்த அட்டவணையை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந்த 9 நாட்களும் அனைத்து ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெறும் காலங்களில் திருமலையில், நன்டையாளர்கள் யாருக்கும் அறை ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. சாமானிய மக்களுக்கு அதிக அறை ஒதுக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிரம்மோற்சவத்தின் துவக்க நாளான அக்டோபர் 4 மற்றும் நிறைவு நாளான அக்டோபர் 12 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சலுகை அடிப்படையில் சிறப்பு தரிசனம் செய்ய நன்கொடையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் பிரம்மோற்சவ காலத்தில் நன்டையாளர்களுக்கான டிரெஸ்ட் மற்றும் அனைத்து திட்டங்களும் முடக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லை.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பிளஸ்டூ தேர்வு முடிவுகள்: ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகளில் அசத்தலான தேர்ச்சி விகிதம்!
ஆட்சியமைப்பதில் சிக்கல்.. இப்போது கூட விஜய் பேசாமல் இருப்பது ஏன்.. என்னதான் பிரச்சினை?
நல்லதே நடக்கும்.. ஒரு நிமிடக் கதை (8)
மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!
மே 1ம் தேதி மட்டுமல்ல.. எப்போதுமே கொண்டாடுவோம் தொழிலாளர்களை!
எண்ணங்களை நிறுத்துவது எப்படி? (How to Stop Thoughts?)
சென்னை ஹஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வில் 98.10% தேர்ச்சி!
{{comments.comment}}