திருப்பதியில் ரூம் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம்.. பலருக்கும் அதிர்ச்சி.. ஆனால் பக்தர்களுக்கு ஹேப்பி!

Aug 20, 2024,05:32 PM IST

திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்குவதான அறைகள் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தாலும், சாமானிய பக்தர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திருவிழா நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் சாமானிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வது, அவர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்யவதற்கு என திருப்பதி தேவஸ்தானம் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. உற்சவ காலங்களில் சாமானி மக்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பல முக்கிய சேவைகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.




இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 04ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தின் 3வது மற்றும் 4வது வாரங்களில் இந்த பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் செய்வார். இது குறித்த அட்டவணையை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந்த 9 நாட்களும் அனைத்து ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெறும் காலங்களில் திருமலையில், நன்டையாளர்கள் யாருக்கும் அறை ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. சாமானிய மக்களுக்கு அதிக அறை ஒதுக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிரம்மோற்சவத்தின் துவக்க நாளான அக்டோபர் 4 மற்றும் நிறைவு நாளான அக்டோபர் 12 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சலுகை அடிப்படையில் சிறப்பு தரிசனம் செய்ய நன்கொடையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் பிரம்மோற்சவ காலத்தில் நன்டையாளர்களுக்கான டிரெஸ்ட் மற்றும் அனைத்து திட்டங்களும் முடக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்