திருப்பதி : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்குவதான அறைகள் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தாலும், சாமானிய பக்தர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடத்தின் அனைத்து நாட்களுமே திருவிழா நடைபெறுவது அனைவருக்கும் தெரியும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் எவ்வளவு கூட்டம் வந்தாலும் சாமானிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வது, அவர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்யவதற்கு என திருப்பதி தேவஸ்தானம் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. உற்சவ காலங்களில் சாமானி மக்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பல முக்கிய சேவைகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்டோபர் 04ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, அக்டோபர் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதத்தின் 3வது மற்றும் 4வது வாரங்களில் இந்த பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் ஒன்பது நாட்களும் உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் செய்வார். இது குறித்த அட்டவணையை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே வெளியிட்டு விட்டது. இந்த 9 நாட்களும் அனைத்து ஆர்ஜித சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெறும் காலங்களில் திருமலையில், நன்டையாளர்கள் யாருக்கும் அறை ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. சாமானிய மக்களுக்கு அதிக அறை ஒதுக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பிரம்மோற்சவத்தின் துவக்க நாளான அக்டோபர் 4 மற்றும் நிறைவு நாளான அக்டோபர் 12 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சலுகை அடிப்படையில் சிறப்பு தரிசனம் செய்ய நன்கொடையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் பிரம்மோற்சவ காலத்தில் நன்டையாளர்களுக்கான டிரெஸ்ட் மற்றும் அனைத்து திட்டங்களும் முடக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}