சென்னை: டிடிஎப் வாசன் மீது தொடர்ந்து விபத்து ஏற்படுத்தக் கூடிய வழக்குகள் வருவதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி ஜாமீன் மனுவை இன்று இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நிராகரித்து விட்டார்.
கடந்த 17ம் தேதி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டி.டி.எப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டிசத்திரம் எனும் பகுதியில் தனது வாகனத்தில் முன் சக்கரத்தை தூக்கி சாகசம் செய்ய முயன்றபோது அவரது வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் வாசன் தலைகீழாக இருமுறை சுழற்றியடித்து தூக்கி விசப்பட்டார்.
காயமடைந்த டிடிஎப் வாசன் சாலையிலிருந்து சில அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். சாலையில் சென்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு பின்னர் டி.டி.எப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் டிடிஎஃப் வாசன். அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அதை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மீண்டும் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
உழைப்பின் உயர்வு (கவிதை)
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
{{comments.comment}}