தவெகவில் இணைந்த தூத்துக்குடி ஸ்னோலின் குடும்பம்.. உறுப்பினர் சேர்க்கையில் தவெக தீவிரம்

Nov 11, 2024,05:49 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் ஸ்னோலின் தாயார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சி சத்தம் போடாமல் தேவையில்லாத வாதங்களில் ஈடுபடாமல், உறுப்பினர் சேர்க்கையை மாநிலம் முழுவதும் முடுக்கி விட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு முக்கிய அம்சமாக தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஒரு உறுப்பினராக வனிதா என்பவர் தன்னை இணைத்துக் கொண்டார்.


இவர் யார் என்றால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடூரமாக பலியானவர்தான் ஸ்னோலின். அவரது தாயார்தான் வனிதா. 




தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆள் அம்பு படை என்று யாரும் இல்லாமல் ஸ்னோலின் வீட்டுக்கு இரவோடு இரவாக போய் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார் விஜய். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார் விஜய். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தார்.


இதன் காரணமாக இந்த மக்கள் மத்தியில் விஜய்க்கு தனி இடம் உள்ளது. இதனால்தான் தற்போது ஸ்னோலின் தாயார் விஜய் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட தவெக தலைவர் அஜீதா ஆக்னஸ் தலைமையில் நடந்த நிகழ்வில் வனிதா உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


ஸ்னோலினின் தாயார் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் மொத்தமாக தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதேபோல நாகப்பட்டனத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் தவெகவினர் மும்முரமாக இறங்கியுள்ளதால் மற்ற கட்சியினர் ஒரு வித படபடப்புடன் இதைப் பார்த்து வருகின்றனராம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதாரண வேலையில், அசாதாரண சேவை.. மர மனிதன் யோகநாதன்!

news

நீரின்றி உயிரில்லை.. நீரை சேமிக்கப் பழகுவோம்.. World Water Day

news

தண்ணீரை சேகரித்து.. அடுத்த தலைமுறைக்கு சேமித்துத் தர வேண்டும்.. மாணவர்களுக்கு அறிவுரை

news

நிலத்தடி நீரை உயர்த்துவோம்.. அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்வோம்!

news

கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை

news

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!

news

சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?

news

டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்

news

பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்