தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் ஸ்னோலின் தாயார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி சத்தம் போடாமல் தேவையில்லாத வாதங்களில் ஈடுபடாமல், உறுப்பினர் சேர்க்கையை மாநிலம் முழுவதும் முடுக்கி விட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு முக்கிய அம்சமாக தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஒரு உறுப்பினராக வனிதா என்பவர் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவர் யார் என்றால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடூரமாக பலியானவர்தான் ஸ்னோலின். அவரது தாயார்தான் வனிதா.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆள் அம்பு படை என்று யாரும் இல்லாமல் ஸ்னோலின் வீட்டுக்கு இரவோடு இரவாக போய் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார் விஜய். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார் விஜய். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தார்.
இதன் காரணமாக இந்த மக்கள் மத்தியில் விஜய்க்கு தனி இடம் உள்ளது. இதனால்தான் தற்போது ஸ்னோலின் தாயார் விஜய் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட தவெக தலைவர் அஜீதா ஆக்னஸ் தலைமையில் நடந்த நிகழ்வில் வனிதா உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஸ்னோலினின் தாயார் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் மொத்தமாக தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல நாகப்பட்டனத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் தவெகவினர் மும்முரமாக இறங்கியுள்ளதால் மற்ற கட்சியினர் ஒரு வித படபடப்புடன் இதைப் பார்த்து வருகின்றனராம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            வண்ணதாசன் - ஒரு சிறு இசை - சிறுகதை நூல்.. மதிப்புரை!
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            நவம்பர் மாதமே வருக வருக.. 30 நாட்கள் கொண்ட நான்கு மாதங்களில்.. கடைசி மாதம்!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
 
                                                                            பீகாரில் 1 கோடி பேருக்கு வேலை.. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்.. தேஜகூ தேர்தல் அறிக்கை
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
{{comments.comment}}