தவெகவில் இணைந்த தூத்துக்குடி ஸ்னோலின் குடும்பம்.. உறுப்பினர் சேர்க்கையில் தவெக தீவிரம்

Nov 11, 2024,05:49 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண் ஸ்னோலின் தாயார் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தார்.


தமிழக வெற்றிக் கழகம் கட்சி சத்தம் போடாமல் தேவையில்லாத வாதங்களில் ஈடுபடாமல், உறுப்பினர் சேர்க்கையை மாநிலம் முழுவதும் முடுக்கி விட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு முக்கிய அம்சமாக தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஒரு உறுப்பினராக வனிதா என்பவர் தன்னை இணைத்துக் கொண்டார்.


இவர் யார் என்றால் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடூரமாக பலியானவர்தான் ஸ்னோலின். அவரது தாயார்தான் வனிதா. 




தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ஆள் அம்பு படை என்று யாரும் இல்லாமல் ஸ்னோலின் வீட்டுக்கு இரவோடு இரவாக போய் அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார் விஜய். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார் விஜய். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தார்.


இதன் காரணமாக இந்த மக்கள் மத்தியில் விஜய்க்கு தனி இடம் உள்ளது. இதனால்தான் தற்போது ஸ்னோலின் தாயார் விஜய் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட தவெக தலைவர் அஜீதா ஆக்னஸ் தலைமையில் நடந்த நிகழ்வில் வனிதா உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


ஸ்னோலினின் தாயார் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் மொத்தமாக தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதேபோல நாகப்பட்டனத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் தவெகவினர் மும்முரமாக இறங்கியுள்ளதால் மற்ற கட்சியினர் ஒரு வித படபடப்புடன் இதைப் பார்த்து வருகின்றனராம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

10th பொதுத்தேர்வில்.. அதிக தேர்ச்சி விகிதத்தில்.. சிவகங்கை முதலிடத்தை பிடித்து சாதனை..!

news

11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது.. தேர்ச்சி விகிதம் மொத்தம் 92.09% !

news

தமிழ்நாட்டில்.. மே மாத இறுதியில் கோடை வெயில்.. இயல்பை விட குறையும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தமிழகத்தில் 10வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.. வழக்கம் போல மாணவியரே அதிகம் பாஸ்!

news

பொள்ளாச்சி வழக்கில்.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க.. முதல்வர் உத்தரவு..!

news

என் குழந்தைகள் என் உயிர்.. என்னிடமிருந்து பிரிக்க முயன்றார்கள்.. நடிகர் ரவி மோகன் பரபரப்பு அறிக்கை

news

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 52 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு..பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்ய வேண்டாம்...ஆப்பிள் சிஇஓ.,க்கு டிரம்ப் உத்தரவு

news

cyclone shakthi பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்...புயல் காற்றுடன் மழை வெளுக்க போகுதாம்

அதிகம் பார்க்கும் செய்திகள்