தவெக கொடிகளுடன் அதிமுக கூட்டங்களில் பங்கேற்போர் யார்.. இப்போதாவது சுதாரிப்பாரா விஜய்?

Oct 10, 2025,06:15 PM IST

சென்னை: தவெக கொடிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டங்களுக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது நல்லது. இல்லாவிட்டால் அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது நலம் விரும்பிகள் எச்சரிக்கிறார்கள்.


விஜய்யின் வித்தியாசமான அரசியல் அவருக்கே பெரும் பாதகமாகப் போய் விடும் போல தெரிகிறது. எதிலுமே பிடிப்புடன் அவர் செயல்படுவதாக தெரியவில்லை. எல்லாவற்றிலும் மிக மிக நிதானம் காட்டுகிறார். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் இருக்கிறார். எது நடந்தாலும் அலட்டிக் கொள்ளவும் செய்வதில்லை. ஆனால் இது அவருக்கு சரியானதாக இருக்காது. அவர் உடனடியாக சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் என்று அவரது நலம் விரும்பிகள் எச்சரிக்கிறார்கள்.


இதற்கு உதாரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டங்களில் தவறாமல் தவெக கொடியுடன் பலர் வருவதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் தவெகவினரா என்று தெரியவில்லை. இதை விஜய்யும் உடனடியாக விளக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாமல் அவருக்கு நாளை சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.




எடப்பாடி பழனிசாமி, தவெகவை மறைமுகமாகக் குறிப்பிட்டு கூட்டணி வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறி, புரட்சியின் ஒலி என அதை வர்ணித்துள்ளார். தனது பிரச்சாரத்தின் போது, தவெக கொடிகள் அசைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, இது பிள்ளையார் சுழி என்றும், இது புரட்சியின் ஒலி என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரடியாகக் குறிப்பிட்டு, இந்த ஒலி உங்களை செவிடாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.


ஆனால் இதுவரை அதிமுக தவெக கூட்டணி தொடர்பாக இரு கட்சியிலும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை. இப்படி இருக்கையில் விஜய்யின் கட்சிக் கொடிகள் அதிமுக கூட்டங்களில் பறப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தரப்பில், NDA கூட்டணி குறித்த கூற்றுகளை மறுத்துள்ளது. கொடிகளை ஏந்தியவர்கள் கட்சி உறுப்பினர்கள் அல்ல, மாறாக அதிமுக ஆதரவாளர்கள் என்று அக்கட்சி கூறுகிறது.


இந்த விவகாரத்தில் விஜய் உடனடியாக மெளனம் களைய வேண்டும். நாளை எல்லை மீறிய பின்னர் விஜய் பேச முடியாத சூழல் உருவாகி விடலாம். அவருக்கு பல்வேறு நிர்ப்பந்தங்கள் உருவாக இது வாய்ப்பாகி விடும். விஜயகாந்த்துக்கும் இப்படித்தான் முன்பு நடந்தது. அவர் யாருடன் கூட்டணி என்ற குழப்பத்தில் இருந்தபோது அதிமுக கூட்டணிக்கு பல தரப்பிலும் அவருக்கு நிர்ப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. அவரது கட்சியினரே அதிமுக கூட்டணிக்கு குரல் கொடுக்கத் தொடங்கியதால் வேறு வழியில்லாமல் அதிமுக பக்கம் சாய்ந்தார் விஜயகாந்த் என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்

news

கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!

news

பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி

news

யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!

news

ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்