சென்னை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அஞ்சலி செலுத்திய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அறிவார்ந்த சமத்துவ சமுதாயம் அமைக்க தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதி ஏற்போம் என பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக மூத்த நிர்வாகி கி.வீரமணி, திமுக எம் பி கனிமொழி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பெரியாரின் நினைவு தினத்தை போற்றும் வகையில் டிஜிட்டல் நூலகத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் பதிவிட்டு கூறியதாவது, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.
தனது கட்சி ஆரம்பித்த புதிதில் பெரியார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார் விஜய் என்பது நினைவிருக்கலாம். தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக பெரியாரையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தவிர மற்ற அனைத்துக் கொள்கைகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தனது கட்சி மாநாட்டில் விஜய் அறிவித்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}