சென்னை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அஞ்சலி செலுத்திய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அறிவார்ந்த சமத்துவ சமுதாயம் அமைக்க தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதி ஏற்போம் என பதிவிட்டுள்ளார்.
தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக மூத்த நிர்வாகி கி.வீரமணி, திமுக எம் பி கனிமொழி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பெரியாரின் நினைவு தினத்தை போற்றும் வகையில் டிஜிட்டல் நூலகத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் பதிவிட்டு கூறியதாவது, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.
தனது கட்சி ஆரம்பித்த புதிதில் பெரியார் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார் விஜய் என்பது நினைவிருக்கலாம். தவெக கட்சியின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக பெரியாரையும் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தவிர மற்ற அனைத்துக் கொள்கைகளையும் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தனது கட்சி மாநாட்டில் விஜய் அறிவித்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}